தமிழக அரசு பள்ளிகளில் காலிப்பணியிட விவரம் 29ம் தேதி வரை பதிவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 27, 2017

தமிழக அரசு பள்ளிகளில் காலிப்பணியிட விவரம் 29ம் தேதி வரை பதிவு

தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறையில் பணி நியமனம், பணி மாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு இணையதளம் வாயிலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


கலந்தாய்வு தொடர்பாக தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி காலிப்பணியிட விவரங்கள் இணையதளம் மூலம் முதன்முறையாக பள்ளிகளில் பதிவு செய்யப்பட உள்ளது. ஆன்லைன் மூலம் டிச.26ம் தேதிக்குள்(நேற்று) விவரங்களை பதிவு செய்ய தலைமை ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு இருந்தது.

ஆனால் கிறிஸ்துமஸ் மற்றும் தொடர் விடுமுறையால் பணிகளை முழுமையாக முடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.இதற்கிடையில் பள்ளிக்கல்வி இயக்குநர் இளங்கோவன் நேற்று முன்தினம் அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், காலிப்பணியிட விவரங்களை ஆன்லைனில் பதிவு செய்யப்படுவதற்கு வரும் 29ம் தேதி பிற்பகல் வரை கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி