ஆட்சித்தமிழ் ஐஏஎஸ் அகாடமி சார்பில்குரூப் - 4 தேர்வுக்கு இன்று இலவச வகுப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 2, 2017

ஆட்சித்தமிழ் ஐஏஎஸ் அகாடமி சார்பில்குரூப் - 4 தேர்வுக்கு இன்று இலவச வகுப்பு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் குரூப்-4 தேர்வுக்கு ஆட்சித்தமிழ் ஐஏஎஸ் அகாடமியின் முழுநேரப் பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது.
அதற்கான ஒருநாள் இலவச அறிமுக வகுப்பு இன்று(டிச. 2) காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை சென்னை குரோம்பேட்டையில் உள்ள எம்ஐடி எனப்படும் சென்னை தொழில்நுட்ப நிறுவனத்தில் நடைபெறுகிறது.இந்த அறிமுக வகுப்பை டிஎன்பிஎஸ்சி முன்னாள்தலைவர் ஆர். நடராஜ் தொடங்கி வைக்கிறார். அறிமுக வகுப்பில் ஆட்சித்தமிழ் ஐஏஎஸ் அகாடமியின் இயக்குநர் ச.வீரபாபு, அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் ஏ.நடராஜன், சத்யபாமா பல்கலைக்கழக பேராசிரியர்கள் மு.மோ.விஜயலட்சுமி, ஜி.மதிவாணன், விஐடி பல்கலைக்கழக பேராசிரியர் சோ.இளவேனில் உள்ளிட்ட கல்வியாளர்கள் கலந்துகொள்கிறார்கள்.

இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போட்டித் தேர்வர்கள் வரும் தேர் விலேயே வெற்றி பெற்று அரசுப் பணியைப் பெறுவதற்கான வழிமுறைகளும், புதிய பாடத்திட்டம் மற்றும் வினா அமைப்பு முறை பற்றியும், பொதுத் தமிழில் 100-க்கு 100 பெறுவதற்கான சிறப்புப் பயிற்சி குறித்தும் ஆட்சித்தமிழ் ஐஏஎஸ் அகாடமியின் சிறப்புப் பயிற்சியாளர்கள் பயிற்சி அளிக்கிறார்கள்.மேலும் விவரங்களுக்கு 42037294, 99419 37976, 89394 67323, 97103 75604 என்ற தொலைபேசி எண்களை தொடர்புகொள்ளவும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி