உயர் கல்வி படிப்பில் மாணவர்களை சேர்க்கும் போது மாற்றுத் திறனாளிகளுக்கு 5 சதவீதம் இடம் ஒதுக்க உயர் கல்வித்துறை முடிவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 25, 2017

உயர் கல்வி படிப்பில் மாணவர்களை சேர்க்கும் போது மாற்றுத் திறனாளிகளுக்கு 5 சதவீதம் இடம் ஒதுக்க உயர் கல்வித்துறை முடிவு.

உயர் கல்வி படிப்பில் மாணவர்களை சேர்க்கும் போது மாற்றுத் திறனாளிகளுக்கு 5 சதவீதம் இடம் ஒதுக்க உயர் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. பள்ளிக் கல்வித்துறை, உயர் கல்வித்துறை,
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆணையம்ஆகியவை இணைந்து சென்னையில் கலந்தாய்வு கூட்டத்தை நடத்தின. இந்த கூட்டத்திற்கு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆணையர் அருண்ராய் தலைமை வகித்தார். பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள், உயர் கல்வித்துறை அதிகாரிகள், மாற்றுத்திறனாளிகள் சங்கங்களின் தலைவர்கள் பங்கேற்றனர்.

கட்டாய கல்வி உரிமைச் சட்டப்படி உயர்கல்வி சேர்க்கையில் 5 சதவீத இடங்கள் நடப்பு கல்வி ஆண்டில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை அதிகாரிகள் ஏற்றுக் கொண்டு வரும் கல்வி ஆண்டில் உயர் கல்வி சேர்க்கையின் போது மாற்றுத் திறனாளிகளுக்கு 5 சதவீத இடங்கள் ஒதுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி