அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வுநிலை: வானிலை ஆய்வு மையம் தகவல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 19, 2017

அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வுநிலை: வானிலை ஆய்வு மையம் தகவல்

அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறுகையில்,
''தற்போது வடகிழக்குமற்றும் கிழக்கு பகுதியில் இருந்து குளிர்ந்த கடல் காற்று நிலத்தை நோக்கி வீசிவருகிறது. அதனால் மழை மேகங்கள் உருவாவது தடைபட்டு, மழை வாய்ப்புகள் குறைந்துள்ளன. இந்நிலையில் தெற்கு அந்தமான் மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது.

இதன் தாக்கத்தால் இப்போதைக்கு தமிழகத்துக்கு மழை கிடைக்க வாய்ப்பில்லை. அந்த காற்றழுத்ததாழ்வுநிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.அடுத்து வரும் 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

திங்கள்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் 1 செமீ மழை பதிவாகியுள்ளது'' என்று அதிகாரிகள்கூறினர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி