வட்டி விகிதத்தை உயர்த்திய எஸ்பிஐ! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 3, 2017

வட்டி விகிதத்தை உயர்த்திய எஸ்பிஐ!

ரூ.1 கோடிக்கு மேலான டெபாசிட்களின் வட்டி விகிதத்தைஸ்டேட் பேங்க் ஆஃப்இந்தியா உயர்த்தி அறிவித்துள்ளது.இந்தியாவின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ),
இரண்டு வருட கால வரம்புக்கான ரூ.1 கோடி முதல் ரூ.10 கோடி வரையில்டெபாசிட் செய்யும் வாடிக்கையாளர்களுக்கான வட்டி தொகையை 3.75 சதவிகிதத்திலிருந்து 4.75 சதவிகிதமாகவும், 4.25 சதவிகிதத்திலிருந்து 5.75 சதவிகிதமாகவும் உயர்த்தியுள்ளது. அதேபோல மூத்த குடிமக்களுக்கான வட்டி விகிதமானது 5.75 சதவிதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வட்டி உயர்வு நடைமுறைநவம்பர் 30 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.இத்திட்டத்தில் முதிர்வு காலத்திற்கு முன்னர் பணத்தை திரும்பப் பெற்றால் விதிக்கப்படும் அபராதத் தொகை ஒரு சதவிதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த மாதத் தொடக்கத்தில் மேற்கூறிய டெபாசிட்களுக்கான வட்டித் தொகையை எஸ்பிஐ வங்கி 0.25 சதவிகிதம் குறைத்திருந்தது. இந்நிலையில் தற்போது டெபாசிட் வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளது.எஸ்பிஐ வங்கியின் இந்த வட்டி உயர்வு நடவடிக்கையைத் தொடர்ந்து நாட்டின் பிற வங்கிகளும் வட்டித் தொகையை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி