பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு நிகழ்வாக அனைத்து பள்ளிகளுக்கும் 12-ம் தேதி விடுமுறை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 11, 2018

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு நிகழ்வாக அனைத்து பள்ளிகளுக்கும் 12-ம் தேதி விடுமுறை

ஜனவரி 14-ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு நிகழ்வாக அனைத்து பள்ளிகளுக்கும் 12ம் தேதி விடுமுறைதமிழக அரசு அறிவித்து உள்ளது.
தமிழக கலாச்சாரம், பாரம்பரியத்தை பேணிக்காக்கும் பொருட்டு விடுமுறை அறிவிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக தமிழகம் முழுவதும் பஸ்கள் முழு அளவில் இயங்கவில்லை. போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் காரணமாக பொதுமக்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகினர். பள்ளி செல்லும் மாணவர்களும் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகினர்.

அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்என மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர். பள்ளிக்கு நீண்ட தொலைவு செல்லும் மாணவர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர். போராட்டம் முடிவுக்கு வராத நிலையில் சிறப்பு நிகழ்வாக அனைத்து பள்ளிகளுக்கும் 12-ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி