கல்வித்துறையில் 120 கண்காணிப்பாளர் பணியிடம் காலி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 15, 2018

கல்வித்துறையில் 120 கண்காணிப்பாளர் பணியிடம் காலி

கல்வித்துறையில் அமைச்சு பணியாளர்களுக்கு பதவி உயர்வு நிறுத்திவைக்கப்பட்டுள்ளதால் 120 கண்காணிப்பாளர் பணியிடங்கள் ஓராண்டாகநிரப்பப்படவில்லை.
இதனால் நிர்வாக பணிகளில் தேக்கம் ஏற்பட்டுள்ளது.மாநிலத்தில் இத்துறையின் கீழ் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள்உள்ளனர். இவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 15ல் பேனல்(பணிமூப்பு பட்டியல்) வெளியிட்டு பதவி உயர்வு வழங்க வேண்டும்.இரு ஆண்டுகளாக பேனல் வெளியிடாததால் பதவி உயர்வு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் உதவியாளர், இருக்கை கண்காணிப்பாளர்,கண்காணிப்பாளர், நேர்முக உதவியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் கூறியதாவது: மாநிலத்தில் 120 கண்காணிப்பாளர்பணியிடங்கள்காலியாக உள்ளன. நிர்வாக பணிகள் ஸ்தம்பித்துள்ளன. பதவி உயர்வுஅளிக்கப்பட்டால் இப்பணியிடங்கள் நிரப்பப்படும். இப்பதவி உயர்வுமார்ச் 15ல் வழங்கப்பட்டிருக்க வேண்டும். இதுவரை அதற்கான பேனல்கூட வெளியிடப்படவில்லை.குறிப்பிட்டபடி மார்ச் 15 பதவி உயர்வு கிடைத்திருந்தால் சம்பளத்தில்பணப் பலன் 12 ஆயிரம் ரூபாய் வரை கிடைத்திருக்கும். அதிகாரிகள்குளறுபடியால் பணப் பலன் பலருக்கும் கிடைக்க வில்லை. 2018 க்கானபேனல் வெளியிடும் காலம் வந்துவிட்டது. போராட்டங்களில்ஈடுபடும்முன் கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

இணை இயக்குனர்கள் மாற்றம் காரணமா: அமைச்சு பணியாளர்கள் பேனல்,பதவி உயர்வு போன்ற பணிகளை கல்வித்துறை இணை இயக்குனர்(பணியாளர் தொகுப்பு) கண்காணிக்கிறார். கடந்த 15 மாதங்களில் இப்பணியில்இருந்த நரேஷ், சேதுராமவர்மா, பாஸ்கரசேதுபதி, சசிகலா என குறுகியகாலங்களில் அடுத்தடுத்து பணியிட மாற்றங்கள் செய்யப்பட்டனர்.

இதுபோன்ற நடவடிக்கையால் தான் பதவி உயர்வு வழங்கமுடியாமல்போய்விட்டதாக அமைச்சு பணியாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.அதேநேரம் தற்போதுள்ள இணை இயக்குனர் குப்புசாமியாவது இதில்சிறப்பு கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும், எனஎதிர்பார்க்கின்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி