பிளஸ் 1 தனித்தேர்வர்கள் தட்கல் முறையில் விண்ணப்பிக்கலாம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 17, 2018

பிளஸ் 1 தனித்தேர்வர்கள் தட்கல் முறையில் விண்ணப்பிக்கலாம்

நடப்பாண்டு முதல், பிளஸ் 1 வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு நடக்க உள்ளது. இந்த தேர்வு மார்ச் மாதம் நடக்க உள்ளது.

அதையொட்டி, நேரடியாக பிளஸ் 1 பொதுத்தேர்வு எழுத உள்ள தேர்வர்கள், தேர்வுத்துறையால் அறிவிக்கப்பட்ட நாட்களில், ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு, தேர்வுத்துறை, தத்கல் திட்டத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க, கால அவகாசம் வழங்கி உள்ளது.
அதன்படி, தத்கல் திட்டத்தில் விண்ணப்பிக்க உள்ள பிளஸ் 1 தனித்தேர்வர்கள், அந்தந்த கல்வி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள அரசு தேர்வுத்துறை சேவை மையங்களில் இன்று முதல், 19 வரை விண்ணப்பிக்கலாம்.
மேலும், இது குறித்த தகவல்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலமாகவோ அல்லது முதன்மை கல்வி அலுவலகம், சேவை மையங்களுக்கு நேரில் சென்றோ அறிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்க உள்ள தனித்தேர்வர்கள், பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி