ரேஷனில் மார்ச் 1 முதல் ஸ்மார்ட் கார்டு மூலம் மட்டுமே பொருட்கள் வழங்கப்படும்: உணவுத்துறை அமைச்சர் தகவல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 25, 2018

ரேஷனில் மார்ச் 1 முதல் ஸ்மார்ட் கார்டு மூலம் மட்டுமே பொருட்கள் வழங்கப்படும்: உணவுத்துறை அமைச்சர் தகவல்

ரேஷனில் மார்ச் 1 முதல் ஸ்மார்ட் கார்டு மூலம் மட்டுமே பொருட்கள் வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. பெரும்பாலானவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டுள்ளது என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி முடிவடைந்துள்ளது என்றும் அவர் கூறினார். ஸ்மார்ட் கார்டு மாற்றப்பட்டுள்ளதால் ரேஷன் அட்டைகளை முறைகேடாக பயன்படுத்துவது தவிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

இதற்கான ஒருங்கிணைப்பு பணிகள் 2015ல் துவங்கின. மக்களிடம் இருந்து 'ஆதார்' விபரங்களை பெற்று, அவற்றின் அடிப்படையில் ஸ்மார்ட் கார்டு வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, ரேஷன் கடைகளில், ஆதார் விபரம் வாங்கும் பணி, 2016ல் துவங்கியது.

இந்நிலையில் 2017 மார்ச் 1ல் இருந்து ஸ்மார்ட் கார்டு வழங்கும் பணி உணவு துறை மூலம் தொடங்கப்பட்டது. பெரும்பாலானவர்கள் ஸ்மார்ட் கார்டு பெற்றுள்ளதால் வரும் மார்ச் 1 ம் தேதி முதல் ஸ்மார்ட் கார்டு மூலம் மட்டுமே ரேஷனில் பொருட்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி