வருமான வரி செலுத்துவோருக்கு மத்திய அரசு.. '80 சி' பிரிவின் கீழ் உச்சவரம்பை அதிகரிக்க திட்டம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 15, 2018

வருமான வரி செலுத்துவோருக்கு மத்திய அரசு.. '80 சி' பிரிவின் கீழ் உச்சவரம்பை அதிகரிக்க திட்டம்

'அடுத்த மாதம் தாக்கல் செய்யப்படவுள்ள, மத்திய பட்ஜெட்டில், வருமான வரி செலுத்துவோருக்கு சாதகமான அம்சங்கள் இடம் பெறும் வகையில், அறிவிப்புகள் இருக்கும்' என, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
வருமான வரி சட்டம், 1961, பிரிவு 80சி,யின் கீழ், தற்போது வழங்கப்படும் வரி சலுகையை, 1.5 லட்சம் ரூபாயிலிருந்து, இரண்டு லட்சமாக உயர்த்த, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.தற்போதைய பட்ஜெட்டில், முறையாக வரி செலுத்துவோருக்கு சலுகை அளிக்கவும், பொதுமக்களின் சேமிப்பை அதிகரிக்கவும், சில அறிவிப்புகளை வெளியிட, மத்திய அரசுதிட்டமிட்டுள்ளது.

இது குறித்து, மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது: ஏராளமானோர் வரி ஏய்ப்பில் ஈடுபடும் நிலையில், மாத சம்பளம் பெறுவோர், சிறு தொழில் முனைவோர், பெண்கள், மூத்த குடிமக்கள் போன்ற பிரிவுகளை சேர்ந்தோர், முறையாக வரி செலுத்தி வருகின்றனர். இவர்களை ஊக்குவிக்கும் வகையிலும், இவர்களின் சேமிப்பை அதிகரிக்கும் வகையிலும், வருமான வரி சட்டசம், 1961, பிரிவு, 80 சி, யின் கீழ் சேமிக்கும் தொகையில், 1.5 லட்சம் ரூபாய் வரை வருமான வரி விளக்கு அளிக்கப் படுகிறது.இவர்களின் சேமிப்பை மேலும் அதிகரிக்கும் வகையில், இந்த உச்சவரம்பை, இரண்டு லட்சம் ரூபாயாக உயர்த்த, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம், தனி நபர் சேமிப்பு உயர்வதுடன், வங்கிகளில் குவியும் டிபாசிட் தொகையும் பெருமளவு உயரும்.இதுகுறித்து, ஆடிட்டர்கள், நிதியியல் வல்லுனர்கள், மத்திய அரசு உயர் அதிகாரிகளுடன் கலந்து பேசி, மத்திய அரசு, விரைவில் நல்ல முடிவெடுக்க உள்ளது. இது குறித்த அறிவிப்பு, வரும் பட்ஜெட் கூட்ட தொடரிலேயே வெளியாக வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

இந்த அறிவிப்பு வெளியானால், அது, மாத சம்பளம் பெறும், மத்திய தர வகுப்பு மக்கள், பெண்கள் மற்றும் மூத்த குடிமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறும்.

இது, மத்தியில் ஆளும், பா.ஜ., அரசுக்கு, எதிர் வரும் தேர்தல்களில் ஓட்டு வங்கியாக மாறவும் வாய்ப்புள்ளதாக,பா.ஜ., வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி