யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வு முடிவு வெளியீடு: தமிழகத்திலிருந்து 810 பேர் தகுதி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 11, 2018

யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வு முடிவு வெளியீடு: தமிழகத்திலிருந்து 810 பேர் தகுதி

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) சார்பில் நடத்தப்பட்ட இந்திய குடிமைப் பணிகளுக்கான முதன்மைத் தேர்வு முடிவுகள் புதன்கிழமை வெளியிடப்பட்டது. இதில் தமிழகத்திலிருந்து 810 பேர் தகுதி பெற்றுள்ளனர்.

இந்தத் தேர்வு முடிவுகளை www.upsc.gov.in என்ற இணையதளத்தில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.
ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட இந்திய குடிமைப் பணிக்கான தேர்வு, யுபிஎஸ்சி சார்பில் நடத்தப்படுகிறது. முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு இறுதியாக நேரடி ஆளுமை திறனாய்வு என்ற மூன்று நிலைகளில் இந்தத் தேர்வு நடத்தப்படும்.

கடந்த ஆண்டு ஜூன் 18-ஆம் தேதி நடத்தப்பட்ட முதல்நிலைத் தேர்வை 6 லட்சம் பேர் எழுதினர். இவர்களில் 13 ஆயிரத்து 365 பேர் முதன்மைத் தேர்வுக்குத் தகுதி பெற்றனர். இந்த முதன்மைத் தேர்வானது நாடு முழுவதும் கடந்த ஆண்டு அக்டோபர் 28-ஆம் தேதி முதல் நவம்பர் 3-ஆம் தேதி வரை நடத்தப்பட்டது.

இந்தத் தேர்வு முடிவு புதன்கிழமை வெளியிடப்பட்டது. இதில், தமிழகத்தைச் சேர்ந்த 810 பேர் உள்பட நாடு முழுவதும் 2 ஆயிரத்து 568 பேர் இறுதிகட்டமான நேரடி ஆளுமை திறனாய்வுக்கு தகுதி பெற்றுள்ளனர்.
இந்த ஆளுமை திறனாய்வானது புதுதில்லியில் உள்ள யுபிஎஸ்சி அலுவலகத்தில் அடுத்த மாதம் 19-ஆம் தேதி தொடங்க
உள்ளது.

இதற்குத் தகுதி பெற்றவர்கள் www.upsc.gov.in என்ற இணையதளத்திலிருந்து தங்களுக்கான அழைப்புக் கடிதத்தை வரும் 18-ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம் செய்ய இயலாதவர்கள் கடிதம் மூலமாகவோ அல்லது 011 - 2338 5271, 2338 1125, 2309 8543 ஆகிய தொலைபேசி எண்கள் மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம் என யுபிஎஸ்சி தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி