அரசு பணியில் சேர்ந்த ஒருவர் ஓராண்டு காலத்திற்குள் இறந்துப்போனால் அவருடைய விதவை மனைவிக்கு ஒய்வு ஊதியம் வழங்க வேண்டுமா? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 13, 2018

அரசு பணியில் சேர்ந்த ஒருவர் ஓராண்டு காலத்திற்குள் இறந்துப்போனால் அவருடைய விதவை மனைவிக்கு ஒய்வு ஊதியம் வழங்க வேண்டுமா?

தமிழ்நாடு ஓய்வூதிய விதிகள் 1978 ல் விதி 45(3)(a) மற்றும் (b)  ன்படி ஓராண்டுக்கு குறைவாக பணியாற்றி இறந்த அரசு ஊழியருக்கு இறப்பு மற்றும் ஓய்வுகால பயனாக இரண்டு மாத காலச் சம்பளம் மட்டுமே வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.


ஆனால் தமிழ்நாடு ஓய்வூதிய விதிகளில், விதி 49(2) ல் வரம்புரையில் (PROVISO) குடும்ப ஓய்வூதியம் வழங்குவது குறித்து கூறப்பட்டுள்ளது. அதன்படி ஓராண்டு காலத்திற்கு குறைவாக பணியாற்றிய அரசு ஊழியர் இறந்து போனால், அவருடைய விதவை மனைவிக்கு ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

அந்த விதி 49(2) கீழே தரப்பட்டுள்ளது.

49(2) துணை விதி 3-ல் கூறப்பட்டுள்ளதற்கு எந்த பாதிப்பும் இல்லாத வகையில், ஒரு அரசு ஊழியர் இறக்க நேரிட்டால் 1(a) ஓராண்டு காலத்திற்கு குறைவில்லாமல் தொடர்ந்து பணியாற்றியிருக்க வேண்டும். அல்லது அவருடைய பணிக் காலத்தில் எந்தவொரு நேரத்திலும் இறக்க நேரிடுதல்

(b)  பணி ஓய்வுக்கு பிறகு அவர் இறக்கும் நாளில் ஓய்வூதியம் பெற்றுவருவாரேயானால், இறந்த போனவரின் குடும்பத்தினர் அந்த குடும்ப ஓய்வூதியத்தை எப்படி பெற தகுதியுடையவர்கள் என்று கூறப்பட்டுள்ளது.

ஒருவரை அரசு ஊழியராக பணி நியமன செய்வதற்கு முன்பு உரிய மருத்துவ அதிகாரியால் பரிசோதிக்கப்பட்டு அவர் பணியில் சேர்வதற்கு தகுதி என்று அறிவிக்கப்பட்டு பணியில் சேர்ந்து ஓராண்டு காலம் பணி நிறைவடைவதற்கு முன்பாக அந்த அரசு ஊழியர் இறக்க நேரிட்டால் அவருடைய குடும்பத்தினருக்கு ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும்.

எனவே மேற்கண்ட விதியின்படி ஓராண்டு காலம் பணி நிறைவடைவதற்கு முன்பாக ஓர் அரசு ஊழியர் இறக்க நேரிட்டால் அவருடைய குடும்பத்தினருக்கு, குடும்ப ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.

இந்த தீர்ப்பை " தமிழ்நாடு அரசு Vs M. தெய்வசிகாமணி (2009-3-MLJ-1) மற்றும் உச்சநீதிமன்றம் S. K. துவா Vs ஹரியானா மாநில அரசு (AIR-2008-SC-1077) ஆகிய வழக்குகளில் வழங்கப்பட்ட தீர்ப்புகளை சுட்டிக்காட்டி வழங்கியுள்ளது.

W. P. NO - 12437/2007, dt - 3.12.2014"

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி