நாட்டா நுழைவுத் தேர்வு : தேதி அறிவிப்பு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 8, 2018

நாட்டா நுழைவுத் தேர்வு : தேதி அறிவிப்பு!


அகில இந்தியஅளவில் பிஆர்க் படிப்புக்கு நடத்தப்படும் நாட்டா ( National Aptitude Test in Architecture) நுழைவுத் தேர்வு ஏப்ரல் 29ஆம் தேதி நடத்தப்படும் எனதேசிய ஆர்கிடெக்ட் கவுன்சில் அறிவித்துள்ளது.
அண்ணா பல்கலை உட்பட அனைத்துப் பல்கலைகளின் கல்லூரிகளிலும், பிஇ, பிடெக்., படிப்பைப் போல் பிஆர்க்., படிப்பில் சேர மாணவர்கள் நாட்டா நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். வரும் கல்வி ஆண்டில், பிஆர்க், சேர்வதற்கான, 'நாட்டா' நுழைவுத் தேர்வை தேசிய 'ஆர்கிடெக்ட்' கவுன்சில் நேற்று அறிவித்தது. ஏப்ரல் 29ஆம் தேதி நாடு முழுவதும் நாட்டா தேர்வு நடக்கும். ஜூன் 1ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகும். ஜனவரி 16ஆம் தேதி முதல் மார்ச் 2ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

 மேலும், விவரங்களை https://learning.tcsionhub.in/test/nata-2018 என்ற இணையதள இணைப்பில், தெரிந்துகொள்ளலாம்.2016ஆம் ஆண்டு வரை பிஆர்க் படிப்புக்கு ஆன்லைனில் தேர்வு நடத்தப்பட்டது. ஒவ்வொரு மாணவரும், ஒரே ஆண்டில், ஐந்து முறை தேர்வு எழுதலாம். இதில் அதிகமான மதிப்பெண், தேர்ச்சிக்கான கணக்கில் எடுக்கப்படும்.

இதில், முறைகேடுகள் நடப்பதாகப் புகார்கள் எழுந்ததால் 2017ஆம் ஆண்டு முதல் ஆண்டுக்கு ஒரு முறை நாட்டா நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. புதிய நடைமுறை பற்றி தெரியாததால் 2017ஆம் ஆண்டு பல மாணவர்கள் நுழைவுத் தேர்வு எழுதாமல் பிஆர்க், படிக்கமுயன்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி