பள்ளிக் கல்வித் துறையை சேர்ந்த இயக்குனர், கார்மேகம் உள்ளிட்ட நான்கு பேருக்கு, ஐ.ஏ.எஸ்., அந்தஸ்து. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 17, 2018

பள்ளிக் கல்வித் துறையை சேர்ந்த இயக்குனர், கார்மேகம் உள்ளிட்ட நான்கு பேருக்கு, ஐ.ஏ.எஸ்., அந்தஸ்து.

பள்ளிக் கல்வித் துறையை சேர்ந்த இயக்குனர், கார்மேகம் உள்ளிட்ட நான்கு பேருக்கு, ஐ.ஏ.எஸ்., அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.தமிழக அரசு துறைகளில் உள்ள உயர் அதிகாரிகளுக்கு,
பணி அனுபவம், ஆங்கில மொழித் திறன், பணித்திறன் ஆகியவற்றின் அடிப்படையில், ஐ.ஏ.எஸ்., அந்தஸ்தும், அதற்கான பதவி உயர்வும் வழங்கப்படும்.இந்த ஆண்டு, நான்கு, ஐ.ஏ.எஸ்., இடங்களுக்கு, 2017 டிச., 27ல், புது டில்லியில் நேர்காணல் தேர்வு நடந்தது. அதில்,தமிழகத்தை சேர்ந்த, 19 அதிகாரிகள் பங்கேற்றனர். தேர்ச்சி பட்டியல், நேற்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், தொடக்க கல்வி இயக்குனராக இருந்த கார்மேகம், ஊரக வளர்ச்சி துறை அதிகாரி, மேகராஜ், பதிவுத்துறை கூடுதல், ஐ.ஜி., ரத்னா மற்றும் கூட்டுறவு துறை சிறப்பு அதிகாரி, சிவன் அருள் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

2 comments:

  1. உயர் நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வில் விளையாடியவரின் நிலை.......

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி