தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது.தமிழகத்தில், இந்த ஆண்டு ஜனவரி 1-ம் தேதியை தகுதிநாளாக கொண்டு 18-வயது நிறைவடைந்தவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் பணி நடந்தது.
கடந்த ஆண்டு, அக்டோபர் 3-ம் தேதி இதற்கான திருத்தப் பணிகள் தொடங்கப்பட்டன.அன்றே வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதன்படி, தமிழகத்தில் உள்ள 7 கோடியே 93 லட்சத்து 78 ஆயிரத்து 485 மக்கள் தொகையில், 5 கோடியே 95 லட்சத்து 88 ஆயிரத்து 2 வாக்காளர்கள் இருந்தனர்.இதில், 2 கோடியே 94 லட்சத்து 84 ஆயிரத்து 492 ஆண், 3 கோடியே 98 லட்சத்து 268 பெண் மற்றும் இதர பாலின வாக்காளர்கள் 5 ஆயிரத்து242 பேர் இருந்தனர். தொடர்ந்து, அக்.3-ம் தேதி முதல் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.திருத்தப் பணிகள் அக்டோபர் 31-ம் தேதியுடன் முடிந்த நிலையில், இரண்டு முறை தேர்தல் ஆணைய அனுமதி பெறப்பட்டு டிசம்பர் 4-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
இதற்கிடையில், வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகளுக்காக 10 ஐஏஎஸ் அதிகாரிகளைநியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அவர்கள், பெயர் சேர்த்தல்,நீக்கல் தொடர்பான உத்தரவுகளை வழங்கி அப்பணிகளை செய்துவந்தனர். இப்பணிகள் முடிந்த நிலையில், இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகிறது.மாநகராட்சிகளில் ஆணையர்களும், மாவட்டங்களில் ஆட்சியர்களும் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிடுகின்றனர்.
கடந்த ஆண்டு, அக்டோபர் 3-ம் தேதி இதற்கான திருத்தப் பணிகள் தொடங்கப்பட்டன.அன்றே வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதன்படி, தமிழகத்தில் உள்ள 7 கோடியே 93 லட்சத்து 78 ஆயிரத்து 485 மக்கள் தொகையில், 5 கோடியே 95 லட்சத்து 88 ஆயிரத்து 2 வாக்காளர்கள் இருந்தனர்.இதில், 2 கோடியே 94 லட்சத்து 84 ஆயிரத்து 492 ஆண், 3 கோடியே 98 லட்சத்து 268 பெண் மற்றும் இதர பாலின வாக்காளர்கள் 5 ஆயிரத்து242 பேர் இருந்தனர். தொடர்ந்து, அக்.3-ம் தேதி முதல் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.திருத்தப் பணிகள் அக்டோபர் 31-ம் தேதியுடன் முடிந்த நிலையில், இரண்டு முறை தேர்தல் ஆணைய அனுமதி பெறப்பட்டு டிசம்பர் 4-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
இதற்கிடையில், வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகளுக்காக 10 ஐஏஎஸ் அதிகாரிகளைநியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அவர்கள், பெயர் சேர்த்தல்,நீக்கல் தொடர்பான உத்தரவுகளை வழங்கி அப்பணிகளை செய்துவந்தனர். இப்பணிகள் முடிந்த நிலையில், இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகிறது.மாநகராட்சிகளில் ஆணையர்களும், மாவட்டங்களில் ஆட்சியர்களும் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிடுகின்றனர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி