இயக்குனர் அலுவலகம் முற்றுகை : ஆசிரியர் சங்க தலைவர் எச்சரிக்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 8, 2018

இயக்குனர் அலுவலகம் முற்றுகை : ஆசிரியர் சங்க தலைவர் எச்சரிக்கை

பொங்கலுக்கு பின், பணி மாறுதல் கலந்தாய்வு நடத்தா விட்டால், பள்ளிக்கல்வி இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட உள்ளதாக, அனைத்து வள மைய பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநில தலைவர், ராஜ்குமார் தெரிவித்தார்.
திண்டுக்கல்லில் நேற்று அவர் கூறியதாவது:பணி மாறுதல் மற்றும் பணியிட மாறுதல் கலந்தாய்வுக்கான அரசாணை, 2017, அக்., 31ல் வெளியிடப்பட்டது. இன்று வரை நடக்கவில்லை.உடனடியாக கலந்தாய்வு நடத்த கோரி, வரும் நாட்களில், ஆசிரியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து வேலை செய்வோம்.

இன்னும் நான்கு நாட்களில், நடவடிக்கை எடுக்கா விட்டால், மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.பொங்கல் விடுமுறைக்கு பின், அனைத்து வள மைய பட்டதாரி ஆசிரியர்களை திரட்டி, பள்ளிக்கல்வி இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிடுவோம்.வள மைய ஆசிரியர்களுக்கு, 2013க்கு பின், பொது மாறுதல்கலந்தாய்வு நடத்தவில்லை.

இதனால், 3,000 ஆசிரியர்கள், குடும்பத்தை பிரிந்து சிரமப்படுகிறோம். உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டும், அதிகாரிகள், உத்தரவை அமல்படுத்த தயங்குகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.

2 comments:

  1. Tet posting podavital mutrkai potatam pannal vidvu pirakkum.

    ReplyDelete
  2. Schools studentye Ella sir apparam eppadi tet posting

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி