அரசின் சலுகை திட்டத்தில் பருவ தேர்வு : 13 ஆயிரம் மாணவர்களுக்கு அனுமதி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 15, 2018

அரசின் சலுகை திட்டத்தில் பருவ தேர்வு : 13 ஆயிரம் மாணவர்களுக்கு அனுமதி

இன்ஜி., கல்லுாரிகளில், குறிப்பிட்ட காலத்தில் படிப்பை முடிக்காத, 13 ஆயிரம் மாணவர்களுக்கு, கூடுதல் சலுகையில் தேர்வு எழுத அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., விதிகளின்படி, இன்ஜி., மாணவர்கள், தங்கள் படிப்பில் சேர்ந்த, ஏழு ஆண்டுகளுக்குள், அனைத்து பாடங்களையும் எழுதி, பட்டம் பெற்று விட வேண்டும். அதற்கு பின்னும், சில பாடங்களில் தோல்வியாகி, 'அரியர்' வைத்தால், அதை எழுத அனுமதி கிடையாது.இந்நிலையில், அண்ணா பல்கலையின்,இன்ஜி., கல்லுாரிகளில், ஏழு ஆண்டுகளுக்கு மேல் படிப்பை முடிக்காதவர்கள், 'அரியர்' பாடங்களை முடிக்க, சிறப்பு சலுகை அளிக்கப்பட்டுள்ளது.

மனிதாபிமான அடிப்படையில், உயர்கல்வித்துறை இந்த சலுகையை வழங்கியுள்ளது. இந்த சலுகையில், பிப்., மற்றும் ஆக., என, இரண்டு தேர்வுகளில் பங்கேற்க, மாணவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.இந்த சலுகையின்படி, 19ம் தேதி முதல், மார்ச், 21 வரை, அண்ணா பல்கலை சார்பில், எழுத்து தேர்வு நடக்கிறது. இதற்கான செய்முறை தேர்வுகள், பிப்., 12ல் துவங்கின; வரும், 17ல் முடிகின்றன. இந்த தேர்வுக்கு, 13 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்க, அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

''தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு, மாவட்டந்தோறும், தலா ஒன்று என, 32 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 13 ஆயிரம் மாணவர்களுக்கு, 2,300 வகைகளில், வினாத்தாள் தயாரிக்கப்பட்டுள்ளது,'' என, அண்ணா பல்கலை தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, ஜி.வி.உமா தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி