மே.6-ல் நீட் நுழைவுத்தேர்வு: இன்றே விண்ணப்பம் விநியோகம்; அறிவிப்பால் ஆன்லைன் முடங்கியது - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 8, 2018

மே.6-ல் நீட் நுழைவுத்தேர்வு: இன்றே விண்ணப்பம் விநியோகம்; அறிவிப்பால் ஆன்லைன் முடங்கியது


நீட் மருத்துவ நுழைவுத்தேர்வு வரும் மே.6 அன்று நடத்தப்பட உள்ளதாக சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. இன்று முதல் விண்ணப்பம் விநியோகம் என்ற அறிவிப்பால் சிபிஎஸ்இ ஆன்லைன் பக்கமே முடங்கியது.
நீட் மருத்துவ நுழைவுத்தேர்வு கடந்த ஆண்டு முதல் நாடு முழுதும் நடத்தப்படுகிறது. தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக இயக்கங்கள் நடத்தப்பட்டாலும் உச்ச நீதிமன்ற உத்தரவால் கடந்த ஆண்டு தடையின்றி நடந்தது.

இந்த ஆண்டு தமிழகத்தில் நீட் நுழைவுத்தேர்வை எழுத மாநில பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களும் பயிற்சி நிலையங்கள் மூலம் தயாராகி வருகின்றனர். தமிழக அரசும் அரசுப்பள்ளியில்பயிலும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க 100பயிற்சி மையங்களை அமைத்துள்ளது.இந்நிலையில் வரும் கல்வி ஆண்டுக்கான நீட் நுழைவுத்தேர்வு வரும் மே மாதம் 6-ம் தேதி இந்தியா முழுவதும் நடத்தப்பட உள்ளது. இன்றுமுதலே அதற்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம்விநியோகிக்கப்படுகிறது. ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை தரவிறக்கம் செய்து ஆன்லைன் மூலமே விண்ணப்பமும் செய்யலாம்.

Cbseneet.nic.co என்ற ஆன்லைன் முகவரி மூலம் விண்ணப்பங்களைப் பெறலாம். மார்ச் 9 வரை விண்ணப்பங்களை ஆன்லைனில் அளிக்கலாம். மார்ச் 10-ம் தேதி விண்ணப்ப கட்டணம் கட்ட கடைசி தேதி ஆகும்.விண்ணப்பக் கட்டணம் பொதுப்பிரிவினர், பிற்படுத்தப்பட்டவர்கள்(BC),மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள்(MBC) ரூ.1400/- தாழ்த்தப்பட்டோர் மலைவாழ் மக்கள்(SC/ST) ரூ.750 ஆகும்.இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்ற அறிவிப்பு வந்த நொடியில் லட்சக்கணக்கானோர் விண்ணப்பித்ததால் சிபிஎஸ்இ இணைய தளம் முடங்கியது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி