6140 காவலர் பணியிட எழுத்துத் தேர்வு: இன்று முதல் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்யலாம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 28, 2018

6140 காவலர் பணியிட எழுத்துத் தேர்வு: இன்று முதல் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்யலாம்

காலியாக உள்ள 6,140 காவலர் பணியிட எழுத்துத் தேர்வுக்கான தேர்வுக் கூட நுழைவுச் சீட்டை (ஹால் டிக்கெட்) புதன்கிழமை (பிப்.28) முதல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.


தமிழக காவல்துறையில் ஆயுதப் படையில் காலியாக உள்ள 5,538 இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களுக்கும், சிறைத் துறையில் காலியாக உள்ள 340 இரண்டாம் நிலை சிறைக் காவலர் பணியிடங்களுக்கும், தீயணைப்புத் துறையில் காலியாக உள்ள 216 தீயணைப்போர் பணியிடங்களுக்கும், 46 பின்னடைவு பணியிடங்களுக்கும் சேர்த்து மொத்தம் 6,140 காலிப் பணியிடங்களுக்கு தேர்வு நடைபெறும் என கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு குழுமம் அறிவித்தது.

3.20 லட்சம் பேர் விண்ணப்பம்:  இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் காலக்கெடு கடந்த ஜனவரி 28-ஆம் தேதியுடன் முடிவடைந்தது. தேர்வுக்கு மாநிலம் முழுவதும் இருந்து 3.20 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் 10 சதவீதத்தினர் பெண்கள் ஆவர். அத்துடன் 19 திருநங்கையரும் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர். இந்தப் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வை மார்ச் 11-ஆம் தேதி நடத்துவதற்குரிய ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

80 மதிப்பெண்: எழுத்துத் தேர்வுக்கு மொத்தம் 80 மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன. பொது அறிவு பாடத் திட்டத்தில் இருந்து 50 மதிப்பெண் கேள்விகளும், உளவியல் பாடத் திட்டத்தில் இருந்து 30 மதிப்பெண் கேள்விகளும் கேட்கப்படும். எழுத்துத் தேர்வில் குறைந்தபட்சம் 28 மதிப்பெண்கள் பெற வேண்டும்.

தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு: இந்நிலையில், இந்தத் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு, தேர்வு குழுமத்தின் இணையதளத்தில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு பதிவேற்றம் செய்யப்பட்டது.
எனவே, தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள், தேர்வுக் கூட நுழைவுச் சீட்டை புதன்கிழமை (பிப்.28) முதல் பதிவிறக்கம் செய்து பெறலாம். நுழைவுச் சீட்டு இருந்தால் மட்டுமே மார்ச் 11-ஆம் தேதி நடைபெறும் எழுத்துத் தேர்வுக்கு விண்ணப்பதாரர்கள் அனுமதிக்கப்படுவர் என தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு குழுமத்தைச் சேர்ந்த உயர் அதிகாரி தெரிவித்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி