நாமக்கல் அருகே அரசு பள்ளிக்கு கல்விச்சீர் வழங்கிய பெற்றோர்கள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 20, 2018

நாமக்கல் அருகே அரசு பள்ளிக்கு கல்விச்சீர் வழங்கிய பெற்றோர்கள்


பரமத்திவேலூர் அருகே அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு பெற்றோர்கள் கல்விச்சீர் வழங்கும் புதுமையான நிகழ்ச்சி நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

இந்த பள்ளியில் 234 மாணவ, மாணவியர்கள் படித்து வருகின்றனர். அவர்களுக்கு  9 ஆசிரியைகள் மட்டுமே பயிற்றுவித்து வருகின்றனர். மாணவர்களுக்கு கணினி பயன்பாட்டு பயிற்சி, ஆங்கிலத்தில் பேசுவது, ஓவியப்பயிற்சி உள்ளிட்ட சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது கூடுதல் ஆசிரியர்களை நியனம் செய்தால், இன்றும் சிறப்பாகச் செயல்பட முடியும் என தலைமை ஆசிரியர் தெரிவித்து  இருந்தார்.

இதனைத்தொடர்ந்து அந்த அரசு பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியர்களின் பெற்றோர்கள் சார்பில்  கல்விச்சீர் வழங்கப்பட்டுள்ளது. பெற்றோர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் ஊர்வலமாக பள்ளிக்கு சென்று எழுது பொருட்கள், நோட்டு புத்தகங்கள், சீருடைகள், விளையாட்டு பொருட்களை கல்விச்சீராக வழங்கியுள்ளனர். இந்தப் புதுமையான நிகழ்வு பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

1 comment:

  1. govt seiyyara velaiya makkale senjukitta aparam nama ethuku vote pottu namma time ah waste pannanum

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி