தமிழகத்தின் பல பகுதிகளை சேர்ந்த, ஆசிரியர்கள் மற்றும் அரசுஊழியர்கள், போராட்டத்தில் பங்கேற்றனர்.
பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்வது; ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைப்படி, 2016 ஜனவரி முதல், ஊதிய உயர்வை அமல்படுத்தி, 21 மாத நிலுவைத் தொகையை வழங்குவது; இடைநிலை ஆசிரியர்களின், ஊதிய முரண்பாடுகளை களைவது ஆகிய, கோரிக்கைகளை வலியுறுத்தி, போராட்டம் நடந்தது.
சென்னை, சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன் திரண்ட, ஜாக்டோ - ஜியோ அமைப்பினரை, போலீசார் கைது செய்து, எழும்பூர், ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்திற்கு, அழைத்து வந்தனர். இந்நிலையில், வகுப்புகளை, 'கட்' அடித்து, ஆசிரியர்கள் சிலர் போராட்டத்தில் பங்கேற்றனர். அவர்களது பெயர் பட்டியலை, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் சேகரித்துள்ளனர்.
2014 சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாற்றுத் திறனாளி பட்டதாரி ஆசிரியர்கள் தொடர்பு கொள்க தேனி குமார் 9791565928
ReplyDelete