இணையவசதி இல்லை: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாமல் தவிக்கும் கிராமப்புற மாணவர்கள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 12, 2018

இணையவசதி இல்லை: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாமல் தவிக்கும் கிராமப்புற மாணவர்கள்

தமிழகத்தில் இந்த ஆண்டும் மருத்துவ நுழைவுப்படிப்பிற்கு நீட் தேர்வு உறுதி என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதற்காக விண்ணப்பிக்கும் முறையும் இணையதளத்தின் மூலம் தொடங்கிவிட்டது.
நகர்ப்புறங்களில் உள்ள மாணவர்களுக்கு இணையதள வசதி மற்றும் இணையதள அனுபவம் இருப்பதால் அவர்கள் எளிதில் விண்ணப்பித்துவிட்டனர். இந்த நிலையில் தமிழகத்தின் ஒருசில கிராமப்புற மாணவர்களுக்கு இணையத்தின் மூலம் எப்படி நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பது என்றே தெரியவில்லை. அப்படியே தெரிந்திருந்தாலும் பல கிராமங்களில் இணையவசதி இல்லை. இதனால் கிராமங்களில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்கள் குழப்பத்தில் உள்ளதாக ஏராளமான குற்றச்சாட்டுக்கள் வந்த வண்ணம் உள்ளது. அதுமட்டுமின்றி விண்ணப்பிக்கும் முறை ஆங்கிலம் மற்றும் இந்தியில் உள்ளதும் இந்த மாணவர்களுக்கு பெரும் சிரமத்தை தருகின்றது.

இதனை கருத்தில் கொண்டு கிராமப்புற மாணவர்களும் எளிதில் விண்ணப்பிக்கும் வகையில் தமிழில் விண்ணப்பிக்கும் முறை வேண்டும் என்றும், கிராமப்புறங்களில் தற்காலிக இணையவசதி உடனடியாக ஏற்படுத்தி தரவேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி