ஏப்ரலில், 'கியூசெட்' நுழைவு தேர்வு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 27, 2018

ஏப்ரலில், 'கியூசெட்' நுழைவு தேர்வு

மத்திய அரசு பல்கலைகளுக்கான. 'கியூசெட்' நுழைவு தேர்வு, ஏப்., 28, 29ல் நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகத்தின்,
நேரடி கட்டுப்பாட்டில் உள்ள, 10 பல்கலைகளில் மாணவர்களை சேர்க்க, மத்திய அரசின் பொது நுழைவு தேர்வான, 'கியூசெட்'டில் தேர்ச்சி பெற வேண்டும். வரும் கல்வி ஆண்டில், மாணவர் சேர்க்கைக்கான இந்த தேர்வு, ஏப்., 28, 29ல் நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டுக்கான தேர்வை, மத்திய அரசு சார்பில், ராஜஸ்தான் மத்திய பல்கலை நடத்துகிறது. தேர்வுக்கான பதிவுகள், www.cucetexam.in என்ற, இணையதளத்தில் துவங்கியுள்ளன.தேர்வுக்கு, மார்ச், 26 வரை பதிவு செய்யலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது. மே, 25ல், தேர்வு முடிவை வெளியிட, ராஜஸ்தான் மத்திய பல்கலை திட்டமிடுள்ளது.

திருவாரூரில் இயங்கும் தமிழ்நாடு மத்திய பல்கலையில், இளநிலை முதல், பிஎச்.டி., வரை, 60க்கும் மேற்பட்ட பாடப்பிரிவுகளில், வரும் கல்வி ஆண்டில் சேர, கியூசெட் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். விபரங்களை, http://cutn.ac.in என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.இந்த ஆண்டு முதல், பெங்களூரு, அம்பேத்கர் பொருளியல் கல்லுாரியிலும், கியூசெட் தேர்வு அடிப்படையில் மட்டுமே, மாணவர்கள் சேர்க்கப்படுவர் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி