மீன்வள பல்கலையில் புதிய பாட பிரிவுகள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 21, 2018

மீன்வள பல்கலையில் புதிய பாட பிரிவுகள்

தமிழ்நாடு மீன்வள பல்கலைக் கழகத்தில், வரும் கல்வியாண்டில் புதிய பாடப் பிரிவுகள் துவங்கப்பட உள்ளன.நாகையை தலைமையிடமாக கொண்டு செயல்படும், தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகம்,
தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகம் எனவும், புதிதாக துவக்கப்பட்ட ஓரடியம்புலம் மீன்வளக் கல்லுாரி, தமிழ்நாடு டாக்டர், எம்.ஜி.ஆர்., மீன்வள கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் எனவும் பெயர் மாற்றம் செய்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தற்போது, மீன்வள பல்கலைக் கழகத்தில், பி.எப்.எஸ்.சி., பாடப் பிரிவில், 140 பேர், பி.இ., - 20, எம்.எப்.எஸ்.சி., - 61, பி.எச்.டி., பிரிவில், 35 பேர் பயின்று வருகின்றனர்.இந்நிலையில், வரும் கல்வியாண்டு முதல், நான்காண்டு - இளநிலை பிரிவில், பி.எப்.எஸ்.சி., கடல் அறிவியல், மீன் வணிக மேலாண்மை, பி.டெக்., உணவு தொழில்நுட்பம், ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல் துவக்கப்பட உள்ளன.

இரண்டாண்டு - முதுநிலை பிரிவில், எம்.எப்.எஸ்.சி., ஊட்டச்சத்து மற்றும் உணவு தொழில்நுட்பம், உடலியல் மற்றும் உயிர் வேதியியல், எம்.எஸ்.சி., மரைன் உயிர் தொழில்நுட்பம் ஆகிய புதிய பாடப்பிரிவுகள் துவக்கப்பட உள்ளதாகவும், துணைவேந்தர் பெலிக்ஸ் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி