மானிய ஸ்கூட்டருக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு: தமிழக அரசு அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 6, 2018

மானிய ஸ்கூட்டருக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு: தமிழக அரசு அறிவிப்பு

மானிய ஸ்கூட்டருக்கு விண்ணப்பிக்க பிப்ரவரி 10-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் விண்ணப்பங்கள் பெற அரசு இலக்கு நிர்ணயித்து இருந்தது.
ஒரு லட்சம் இலக்கை எட்டாததால் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. வேலைக்கு செல்லும் பெண்கள் ஸ்கூட்டர் வாங்க தமிழக அரசு ரூ.25,000 மானியம் வழங்குகிறது. மானிய ஸ்கூட்டருக்கு விண்ணப்பிக்க வருமானச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் மற்றும் ஓட்டுநர் உரிமம் ஆகியவைகளை மிகக் குறைந்த காலக் கட்டத்தில் பெற முடியாத நிலை ஏற்படுகிறது.

எனவே, விண்ணப்பிக்க விருப்பம் இருந்தும், பலர் விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டது. மானிய விலையில் இருசக்கர வாகனம் பெற விண்ணப்பிக்க பிப்.5-ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டு முடிந்துள்ளது. பல்வேறு நடைமுறை இடர்ப்பாடுகளால் விரும்பிய அனைவரும் விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் அரசு, விண்ணப்பிக்கும் தேதியை 10-ம் தேதி வரை நீட்டித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி