தேர்வு பணி: ஆசிரியர்களுக்கு கட்டுப்பாடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 27, 2018

தேர்வு பணி: ஆசிரியர்களுக்கு கட்டுப்பாடு

தனியார் பள்ளிகள் ஏற்பாடு செய்யும், உபசரிப்புகளை, தேர்வு பணி ஆசிரியர்கள் ஏற்கக் கூடாது என, அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
தமிழக பாடத் திட்டத்தில், மார்ச்சில், பொது தேர்வுகள் துவங்க உள்ளன.தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 27 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். இதற்காக, 2,794 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு பணிகளில், ஒரு லட்சம் ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர். இந்நிலையில், தேர்வில் முறைகேடுகளை தடுக்க, ஆசிரியர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அதன் விபரம்: தேர்வு பணிக்கு செல்லும் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள், தேர்வறைகளுக்குள் மொபைல் போனை எடுத்துச் செல்லக் கூடாது.

வினாத்தாள் கட்டு பிரிக்கப்பட்ட பிறகோ, தேர்வுத்துறை கட்டுப்பாடு அதிகாரிக்கு அனுப்புவதற்கு முன்னரோ, மொபைல் போனை, 'ஆன்' செய்யக் கூடாது. தேர்வு மையங்களில், தேவையற்ற காகிதங்கள், புத்தகங்கள் இருந்தால், தேர்வு துவங்கும் முன், அவற்றை அகற்ற வேண்டும். தேர்வர்களின்உடைமைகளை, அறைக்குள் அனுமதிக்க கூடாது.தனியார் பள்ளிகளின் தேர்வு மையங்களில், இலவசமாக டீ, காபி போன்றவை வழங்கப்பட்டால், அதை ஏற்கக்கூடாது. உணவு உள்ளிட்ட உபசரிப்பையும் ஏற்கக் கூடாது; அன்பளிப்புகளையும் பெறக் கூடாது.இவ்வாறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி