தேர்வுக்கு வாழ்த்துகள்
****************************
இளந்தளிரே
எதிர்காலமே
பள்ளிப்பூக்களே
வகுப்பறை வைரங்களே
பள்ளிவாழ்வின் இறுதி பயணத்தில்
இலக்கை எட்டவிருக்கும் கண்மணிகளே
தேர்வென்பது போருக்கான பயணமல்ல
பயங்கொளாது நிதானியுங்கள்
இவ்வளவு நாள் கற்றதை நினைவுகூறும் நல்நிகழ்வது
அச்சம் அகலுங்கள்..
திட்டமிட்டு நேரம்செலவழியுங்கள்
பதட்டம் தவிருங்கள்
எதிர்பாரா கேள்வி வந்திடுமோ என முன்னமே யோசனையில் ஆழ வேண்டாம்
யாவும் அறியலாம் தெளிந்த மனநிலையில்..
உடல்நல கவனமெடுங்கள்
உடலின்றி உயிரியக்கம் ஏது
தேர்வை பிறரின் லட்சியத்திற்காகவோ கனவுகளுக்காகவோ
எழுதாதீர்
உங்கள் மனங்காட்டும் பாதையில் செல்லுங்கள்..
மதிப்பெண் போதையில் தடுமாற்ற பாதையில் வேகமெடுக்க வேணாம்
உமது அறிவின் அளவீட்டை அறிந்திட அக்கறை கொண்டு எழுதுங்கள்
தோல்வி சிந்தை தொலையுங்கள்
கிட்டப்போவது ஏதாயினும் அது உம்மாலே தீர்மானிக்கப்படுவது என்பதை நன்குணருங்கள்..
கடைசிநேர பரபரப்புகளின்றி யாவையும் முன்னரே தீர்மானியுங்கள்
நன்றாய் எழுதுங்கள்
நலம் விளையும்
அதற்குமுன்
ஒன்றை நெஞ்சிலெழுதுங்கள்
*உலகம் யாவருக்குமானது உனக்கான இடம் நிச்சயமுண்டு*
அதை மனதில் கொண்டால் நிச்சயம் ஜெயமுண்டு..
*இனிய தேர்வுநாள் வாழ்த்துகள்*
அன்புடன்,
*சீனி.தனஞ்செழியன்,*
முதுகலைத்தமிழாசிரியர்,
அஆமேநிப, திருவலம்-632515.
அலைபேசி:9786623599
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி