பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை உச்ச வரம்புஅதிகரிப்பு.. மத்திய அரசு அதிரடி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 15, 2018

பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை உச்ச வரம்புஅதிகரிப்பு.. மத்திய அரசு அதிரடி

டெல்லி: பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை பெறுவதற்கானஆண்டு வருமான உச்ச வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது.
இந்தியா முழுக்க இருக்கும் பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. முக்கியமாக பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு இருக்கிறது.

தற்போது இந்த மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு உதவித்தொகை பெறுவதற்கான உச்ச வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது.அதன்படி பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான ஆண்டு வருமான உச்ச வரம்பு ரூ. 44,500லிருந்து ரூ.2.5 லட்சமாக உயர்த்தப்பட்டு இருக்கிறது.

இனி ஆண்டு வருமானம் 2.5 லட்சம் வரை இருக்கும் குடும்பத்தை சேர்ந்த மாணவர்களும் உதவித் தொகை பெற முடியும்.அதேபோல் தாழ்த்தப்பட்டவர்களுக்கான ஆண்டு வருமான உச்ச வரம்பு ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.2.5 லட்சமாக உயர்த்தப்பட்டு இருக்கிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி