தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற இருவர், மாநில நல்லாசிரியர் விருது பெற்ற, 11 பேர், 100 சதவீத தேர்ச்சிக்கு காரணமாக இருந்த, 2,646 ஆசிரியர்களை பாராட்டி, ஈரோட்டில் நேற்று நடந்த விழாவில், சான்றிதழ்வழங்கப்பட்டது.விழாவில் பங்கேற்ற பள்ளி கல்வித்துறை அமைச் சர் செங்கோட்டையன் பேசியதாவது:பணி ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், அருகிலுள்ள அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, ஆலோசனை, அறிவுரை வழங்கலாம். இந்தாண்டும் வெளிப்படை தன்மையுடன், ஆசிரியர்கள் பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும்.மாணவர்கள், ஆசிரியர்களின் எதிர்காலம் குறித்த, தொலைநோக்கு சிந்தனை யோடு, தமிழக அரசு செயல்படுகிறது.
மாணவர்களின் மன அழுத்தம், உயர்கல்வி வழிகாட்டுதல், பெற் றோரின் சந்தேகம் தீர்க்கும்வகையில், சேவை மையம் துவக்கப்படும். 108 போன்ற இந்த சேவை மையம், ஓரிரு நாட்களில் தமிழக முதல்வரால் துவக்கப்பட உள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.
ஊடக நண்பர்கள் வெறும் செய்திகளை மட்டும் போடாதீர். அமைச்சர் சொல்றத மட்டும் போட நீங்க ஒன்னும் அவர்கள் ஊடகம் அல்ல. பொதுவான நடு நிலை தன்மையுடன் செயல் படுங்கள். உலகதரம்வாய்ந்த கல்வி கல்வினு தம்பட்டம் அடிகிறீங்க அனால் மற்ற மாநிலத்தில் உள்ள அளவு கூட தரமான கல்வியை கொடுக்க வில்லை. ஊடக நண்பர்கள் கேள்வியே கேக்க மாட்டிங்களா? இல்ல கேள்வி கேக்க உங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதா? இல்ல உங்களுக்கு கேள்வி கேக்க தெரியாதா? ஒரு வருடமாக சொன்னதையே சொல்லுமாம் கிளி பிள்ளை (செங்கோட்டையன்) அது மாதிரி கூறி வருகிறார். அதையும் வேறு செய்தி கிடைக்காத மாதிரி நீங்களும் தினம் தினம் தயவு செய்து விளம்பரம் செய்ய வெண்டாம். இனியாவது மக்கள் கேக்க நினைக்கும் கேள்விகளை அமைச்சர்களை பார்த்து கேளுங்கள். அடுத்த முறை கல்வி அமைச்சரை சந்திக்கும் ஊடக நண்பர்கள் கணினி பாடத்தை நடமுறை படுத்த சொல்லுங்கள். ஒரு வருடத்திற்கு மேலாக புதிய பாடதிட்டம் பணிகள் நடைபெற்று வருகின்றன அனால் கணினி பாடம் சேர்க்கப்பட்டுள்ளதா இல்லையா என cm cell,SCERT க்கே தேரியவில்லை. அரசு கொள்கை முடிவுனு ஒரு அல்ப காரணம் சொல்லுவாங்க பாருங்க...,
ReplyDelete