முதுநிலை ஆசிரியர்கள் முடிவு - பட்டதாரி ஆசிரியர்கள் எதிர்ப்பு : 'மோதலால்' அதிர்ச்சி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 28, 2018

முதுநிலை ஆசிரியர்கள் முடிவு - பட்டதாரி ஆசிரியர்கள் எதிர்ப்பு : 'மோதலால்' அதிர்ச்சி

விடைத்தாள் திருத்தும் முகாம் அலுவலராக பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க எதிர்ப்பு தெரிவித்த முதுநிலை ஆசிரியர்களுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் முகாம் அலுவலராக மாவட்ட கல்வி அலுவலர்கள் (டி.இ.ஓ.,க்கள்) நியமிக்கப்படுவது வழக்கம். இந்நிலையில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கம் சார்பில் 'பட்டதாரி ஆசிரியராக இருந்து டி.இ.ஓ.,க்களானவர்களை முகாம் அலுவலராக நியமித்தால் திருத்தும் பணியை புறக்கணிப்பதாக,' அறிவித்தனர்.

பட்டதாரி ஆசிரியர் கழக மதுரை மாவட்ட செயலாளர் முருகன் கூறியதாவது: பட்டதாரி ஆசிரியராக இருந்து டி.இ.ஓ.,க்களானவர்கள் முகாம் பொறுப்பாளராக இருப்பது பல ஆண்டு நடைமுறை. மதுரை உட்பட பல மாவட்டங்களில் முதன்மை கல்வி அலுவலர்களாகவும் உள்ளனர். பதவிக்கு மதிப்பளிக்க வேண்டும். முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் அறிவிப்பு குழப்பத்தை ஏற்படுத்தும், என்றார்.தேர்வு நேரத்தில் ஆசிரியர்களிடையே ஏற்பட்டுள்ள இந்த மோதலால் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி