சென்னையில் சி.இ.ஓ.,க்கள் கூட்டம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 8, 2018

சென்னையில் சி.இ.ஓ.,க்கள் கூட்டம்

பொதுத் தேர்வுகளை தில்லுமுல்லு இல்லாமல் நடத்துவது குறித்து, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளான, சி.இ.ஓ.,க் களுக்கு, இன்று வழிகாட்டுதல் கூட்டம், சென்னையில் நடத்தப்படுகிறது.
தமிழகத்தில், 10ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, பொதுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. பொதுத் தேர்வுகளை சுமுகமாக நடத்தி முடிக்க, தேர்வுத் துறை சார்பில் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

இது குறித்து,மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, இன்று காலை, சென்னை, அண்ணா நுாற்றாண்டு நுாலகத்தில், வழிகாட்டுதல் கூட்டம் நடக்கிறது. இதில், பள்ளிக் கல்வி அமைச்சர், செங்கோட்டையன், முதன்மை செயலர், பிரதீப் யாதவ், இயக்குனர்கள், இளங்கோவன், வசுந்தராதேவி மற்றும் இணை இயக்குனர்கள் பங்கேற்கின்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி