மாணவர் அனுமதி சீட்டு : சி.பி.எஸ்.இ., எச்சரிக்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 27, 2018

மாணவர் அனுமதி சீட்டு : சி.பி.எஸ்.இ., எச்சரிக்கை

'எந்தக் காரணத்தைக் கூறியும், 10 மற்றும்பிளஸ் 2 மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கான, மாணவர் அனுமதி சீட்டை தராமல் பள்ளிகள் இழுத்தடிப்பு செய்யக்கூடாது' என, சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலை பள்ளிக் கல்வி வாரியம் எச்சரித்துள்ளது.
சி.பி.எஸ்.இ., வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது: சி.பி.எஸ்.இ., 10 மற்றும் பிளஸ் 2 தேர்வுகள், மார்ச் 5ல் துவங்க உள்ளன. இந்தத் தேர்வில்பங்கேற்கும் தகுதியுடைய மாணவர்கள் பட்டியலை பள்ளிகள் அளித்து, அதன்படி, தேர்வு எழுதுவதற்கான மாணவர் அனுமதி சீட்டு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், பள்ளி நடத்திய தேர்வில் தேர்ச்சி பெறாதது, குறைந்த மதிப்பெண் போன்ற காரணங்களைக் காட்டி, மாணவர்களுக்கு அனுமதி சீட்டை தராமல், பள்ளிகள் இழுத்தடிப்பு செய்வதாக புகார்கள் வந்துள்ளன. மேலும் சில பள்ளிகள், அனுமதி சீட்டு வழங்க கட்டணம் வசூலிப்பதாகவும் புகார்கள் வந்துள்ளன.

இது, சட்டவிரோதமான நடவடிக்கை. எந்தக் காரணத்தையும் கூறி, மாணவர்களை தேர்வு எழுத அனுமதிக்காமல் இருக்கக் கூடாது. மாணவர்களின் அனுமதி சீட்டை, பள்ளிகள் வைத்துக்கொள்ளக் கூடாது; மாணவர்களுக்கு வினியோகிக்க வேண்டும். இவ்வாறு செய்தியில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி