வருமானவரி விதிப்பு முறையில் நிலையான கழிவுத் திட்டம் கடந்த 1974-ம் ஆண்டுஅறிமுகம் செய்யப்பட்டது. இதன்படி, மருத்துவம் மற்றும் போக்குவரத்துக்காக செலவிடப்பட்ட ஒரு குறிப்பிட்ட தொகைக்கு நிலையான கழிவு என்ற அடிப்படையில் சம்பளதாரர்கள் வருமானவரி விலக்கு பெறலாம்.
எனினும், இந்தத் திட்டத்தை 2006-ல் அப்போதைய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் ரத்து செய்தார். இந்நிலையில் நிலையான கழிவுத் திட்டம் வரும் நிதியாண்டில் மீண்டும் அமல்படுத்தப்படும் என்றும் இதன்கீழ் ரூ.40 ஆயிரம் வரை வரி விலக்கு பெறலாம் என்றும் மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி தனது பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மத்திய நேரடி வரிகள் வாரியத் தலைவர் சுஷில்சந்திரா நேற்று கூறும்போது, "சம்பளதாரர்கள், ஓய்வூதியம் பெறுவோர் நிலையான கழிவுத் திட்டத்தின் கீழ், போக்குவரத்து மற்றும் மருத்துவச் செலவை குறிப்பிட்டு ரூ.40 ஆயிரம் வரை வரி விலக்கு பெறலாம். எனினும், இதற்கு ஆதாரமாக எந்தவித ஆவணத்தையோ ரசீதையோ தாக்கல் செய்யத் தேவையில்லை. மேலும் வரி ஏய்ப்பு செய்பவர்களையும் கறுப்பு பணம் பதுக்குபவர்களையும் கண்டறிய போதுமான தொழில்நுட்பம் வருமான வரித்துறையிடம் உள்ளது. இதுபோன்ற செயலில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
எனினும், இந்தத் திட்டத்தை 2006-ல் அப்போதைய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் ரத்து செய்தார். இந்நிலையில் நிலையான கழிவுத் திட்டம் வரும் நிதியாண்டில் மீண்டும் அமல்படுத்தப்படும் என்றும் இதன்கீழ் ரூ.40 ஆயிரம் வரை வரி விலக்கு பெறலாம் என்றும் மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி தனது பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மத்திய நேரடி வரிகள் வாரியத் தலைவர் சுஷில்சந்திரா நேற்று கூறும்போது, "சம்பளதாரர்கள், ஓய்வூதியம் பெறுவோர் நிலையான கழிவுத் திட்டத்தின் கீழ், போக்குவரத்து மற்றும் மருத்துவச் செலவை குறிப்பிட்டு ரூ.40 ஆயிரம் வரை வரி விலக்கு பெறலாம். எனினும், இதற்கு ஆதாரமாக எந்தவித ஆவணத்தையோ ரசீதையோ தாக்கல் செய்யத் தேவையில்லை. மேலும் வரி ஏய்ப்பு செய்பவர்களையும் கறுப்பு பணம் பதுக்குபவர்களையும் கண்டறிய போதுமான தொழில்நுட்பம் வருமான வரித்துறையிடம் உள்ளது. இதுபோன்ற செயலில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி