ஆசிரியர்களுக்கு 15 சதவீதம் வரைகூடுதலாக தேர்வு பணி ஊதியம் உயர்வு கிடைக்கும் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 28, 2018

ஆசிரியர்களுக்கு 15 சதவீதம் வரைகூடுதலாக தேர்வு பணி ஊதியம் உயர்வு கிடைக்கும்

பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்த ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் தொகுப்பூதியம், தேர்வுகால பணிக்கான உழைப்பூதியம் மற்றும் மதிப்பூதியம் உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி 15% வரை கூடுதலாக கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
அரசு பொதுத்தேர்வு தொடர்பான அனைத்து பணிகளுக்கும் வழங்கப்படும் உழைப்பூதியம், உள்ளூர் வெளியூர் பணியாளர்களுக்கான தொகுப்புப்படி உள்ளிட்டவை மிக குறைவாக உள்ளது இதனை உயர்த்த வேண்டும் என பல்வேறு ஆசிரியர்சங்கங்கள் போராட்டம் நடத்தின.

இந்நிலையில் இது தொடர்பாக கடந்த 21ம் தேதியிட்ட புதிய அரசாணையை அரசு முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் பிறப்பித்துள்ளார். அதில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரங்கள்:மேல்நிலை, ஆசிரியர் கல்வி பட்டயத்தேர்வு, இடைநிலை, எட்டாம் வகுப்பு, தொழில்நுட்ப தேர்வு ஆகிய தேர்வு காலங்களில் பணிகளில் ஈடுபடும் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு உழைப்பூதியம், மதிப்பூதியம் உயர்த்தி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 15 % வரை உயர்த்தப்பட்டுள்ளது. மேல்நிலை தேர்வு, ஆசிரியர் கல்வி பட்டயத் தேர்வுக்கு 3 மணி நேர உழைப்பூதியம் தாள் ஒன்றுக்கு ரூ.7.50ல் இருந்து ரூ.10ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

 நாள் ஒன்றுக்கு சராசரியாக பகலில் 12 விடைத்தாள்களும், பிற்பகலில் 12 விடைத்தாள்களும் திருத்துகின்றனர். இடைநிலை கல்வி ஆசிரியர்களுக்கு ஒரு விடைத்தாளுக்கு ரூ.6ல் இருந்து ரூ.8 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 8ம் வகுப்பு விடைத்தாள் ஒன்றுக்கு ரூ.2.50ல் இருந்து ரூ.5 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. உள்ளூர் பணியாளர்களுக்கான தொகுப்புபடி மேல்நிலை தேர்வு, தொடக்கக்கல்வி பட்டய தேர்வுக்கு நாள் ஒன்றுக்கு ஒரு நபருக்கு ரூ.100ம், வெளியூர் பணியாளர்களுக்கு ரூ.200ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இடைநிலை 8ம் வகுப்பு நாள் ஒன்றுக்கு ஒரு நபருக்கு ரூ.80ம், வெளியூர் பணியாளர்களுக்கு ரூ.150 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முகாம் உழைப்பூதியமும் மாற்றப்பட்டுள்ளது. முகாம் அலுவலர் உழைப்பூதியம் ரூ.750ல் இருந்து ஒட்டுமொத்தமாக ரூ.1,500ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மதிப்பெண் சரிபார்க்கும் அலுவலருக்கு ரூ.660ல் இருந்து ரூ.1,200ம், ெதாடர்பு அலுவலருக்கு ரூ.200ல் இருந்து ரூ.500ம் என உயர்த்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆசிரியர் சங்கத்தினர் கூறுகையில், தேர்வுப்பணிகளுக்கான உழைப்பூதியத்தை உயர்த்தி வழங்கிட நீண்ட காலமாக போராட்டங்கள் நடத்தப்பட்டன. தற்போது 15 சதவீதம் வரைஉயர்த்தியுள்ளனர். இது வரவேற்கத்தக்கது என்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி