ஏப்ரல் 2ம் தேதி முதல் ஜூன் 29ம் தேதிக்குள் ஓய்வூதியதாரர்கள் நேரில் ஆஜராக வேண்டும்: கருவூல கணக்கு துறை செயலாளர் உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 27, 2018

ஏப்ரல் 2ம் தேதி முதல் ஜூன் 29ம் தேதிக்குள் ஓய்வூதியதாரர்கள் நேரில் ஆஜராக வேண்டும்: கருவூல கணக்கு துறை செயலாளர் உத்தரவு

தமிழக அரசு சார்பில் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்கள் ஏப்ரல் 2ம் தேதி முதல் ஜூன் 29ம் தேதிக்குள் ஓய்வூதியம்  வழங்கும் அலுவலகத்தில் ஆஜராகி பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசின் கருவூல கணக்கு துறை முதன்மை செயலாளர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:மாவட்ட கருவூலங்கள் மற்றும் சார் கருவூலங்கள் மூலம் ஓய்வூதியம் பெறும் தமிழக அரசு ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள்  ஆண்டுதோறும் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை கருவூலத்தில் நேரடியாக ஆஜராகி நேர்காணலை பதிவு செய்யவும், நேரில் வர இயலாதவர்கள்  வாழ்வுச்சான்று பெற்று கருவூலத்திற்கு அனுப்ப வேண்டும். இந்தஆண்டு ஏப்ரல் 2ம் தேதி முதல் ஜூன் 29ம் தேதி வரை நேர்காணலுக்கு கருவூலம் மற்றும் ஓய்வூதியம் வழங்கும்அலுவலகத்தில் ஆஜராகி பதிவு  செய்ய கருவூலத்தின் வேலை நாட்களில் நேரில் வர வேண்டும்.ஜீவன் பிரமான் வாழ்வு சான்றிதழ் திட்டம் மூலம் ஓய்வூதியர்கள் சம்மந்தப்பட்ட கருவூலங்களுக்கு செல்லாமலேயே அரசு இ-சேவை மையங்கள்  வழியாக நேர்காணலை இணையதளத்தில் (www.jeevanpramaan.gov.in) ஆதார்அட்டை வாயிலாக பதிவு செய்து அதன்மூலம்நேர்காணல்  செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.இதுவரை ஆதார் அட்டை, வருமான வரி கணக்குஎண், குடும்ப அடையாள அட்டை மற்றும் நடைமுறையில் உள்ள வங்கி சேமிப்பு கணக்கு எண்  சமர்ப்பிக்காத ஓய்வூதியர்கள், மேற்படி ஆவணங்களின் நகல்களுடன் தங்களின் ஓய்வூதிய கொடுவை எண்ணை குறிப்பிட்டு கருவூலத்தில்  சமர்ப்பிக்கலாம்.

ஓய்வூதியர்கள் நேர்காணலுக்கு வரும்போது ஓய்வூதிய புத்தகம் கொண்டு வரவேண்டும்.நேரில் வர இயலாத ஓய்வூதியர்கள் ஓய்வூதியப் புத்தகம், இதுவரை ஆதார் அட்டை, வருமான வரி கணக்குஎண், குடும்ப அடையாள அட்டை மற்றும்  நடைமுறையில் உள்ள வங்கி சேமிப்பு கணக்கு எண் (www.tn.gov.in/karuvoolam/) சமர்ப்பிக்கவில்லை எனில் அதன் நகல்களுடன்  வாழ்வு சான்றை உரிய படிவத்தில் ஓய்வூதியம் வழங்கும் கருவூலத்திற்கு அனுப்ப வேண்டும்.

குடும்ப ஓய்வூதியர்கள் (நேரில் வருபவர்கள், நேரில் வர இயலாத ஓய்வூதியர்கள்) மறுமணம் புரியவில்லை என்பதற்கான உறுதிமொழியை சமர்ப்பிக்க  வேண்டும். தற்போதைய இருப்பிட முகவரி, கைபேசி எண், மின்னஞ்சல் விவரம் அளிக்க வேண்டும். இதுவரை ஓய்வூதியர் புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் விண்ணப்பம் அளிக்காதவர்கள் கருவூலத்தில் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து  வழங்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.இவ்வாறுஅதில் கூறப்பட்டுள்ளது.

3 comments:

  1. *🖥 கணினி அறிவியல் பாடத்திற்கு பகுதிநேர ஆசிரியர்களாக(Part Time Teachers PT) தற்போது வரை தமிழகம் முழுவதும் எத்தனை ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்? CM CELL REPLY:Date: 26/03/2018*

    *🖥 Number of Temporary Computer Part Time Instructors Working in Tamilnadu Govt Schools: CM CELL REPLY: 🗓Date: 26/03/2018*


    📚 https://kaninikkalvi.blogspot.in/2018/03/part-time-teachers-pt-number-of_27.html?m=1

    *⚠More Official Computer Science B.Ed Related News Visit only* - 🖥kaninikkalvi.blogspot.in📚

    *🚀Share This All CS B.Ed Graduates 🙏🏻*

    ReplyDelete
  2. 1) 765 கணினி பயிற்றுநர் பணியிடங்கள் TRB ANNUAL PLANNER-2018ல் இடம்பெறாததிற்கான உண்மையான காரணம்: NCERT-ன் தற்போதைய விதிகளின்படி 765 கணினி பயிற்றுநர் பணியிடங்கள் மேல்நிலைப் பள்ளி கணினி ஆசிரியர்கள் பணியிடம் என்பதால் கணினி பயிற்றுநர் பணியிடம்(முதுகலை கணினி ஆசிரியராக தரம் உயர்த்தப்பட்டு அரசாணை பெறப்பட்ட பின்னர்)TRB மூலம் நிரப்பப்படும்: CM CELL REPLY: Dt: 27/02/2018 Click Here

    https://kaninikkalvi.blogspot.in/2018/03/765-trb-pg-with-bed-765.html

    More Official News - kaninikkalvi.blogspot.in

    ReplyDelete
  3. 🅱💢 பள்ளிக்கல்வி - மேல்நிலைப் பள்ளிகள் - தொழிற்கல்வி ஆசிரியர்(🖥கணினி அறிவியல்)117 தற்காலிக பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டது.01/01/2018 முதல் 31/12/2018 முடிய ஒரு வருட தொடர் நீட்டிப்பு ஆணை வெளியிடப்படுகிறது📝

    117 தற்காலிக கணிணி அறிவியல் ஆசிரியர்களின் முழுவிவரங்கள் அடங்கிய பட்டியல்📝

    117 Computer Science Teachers Post  One Year(2018) Continuation Order Released 117 Teachers Complete List With Full Details) 👉 Click Here To Download(PDF)

    🛡 https://kaninikkalvi.blogspot.in/2018/03/117-01012018-31122018-117-one-year2018.html?m=1

    🅱💢1880 கணினி பயிற்றுநர் தற்காலிக பணியிடங்களுக்கு 01.01.2018 முதல் 31.12.2018 முடிய ஓராண்டிற்கு தொடர் நீட்டிப்பு ஆணை வெளியீடு 👉 Click Here To Download(PDF)

    🛡 https://kaninikkalvi.blogspot.in/2018/03/1880-01012018-31122018.html?m=1

    ⚠More Official News 📝

    🖥kaninikkalvi.blogspot.in📚

    🚀Share To All CS Teachers Groups

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி