மருத்துவ பட்டமேற்படிப்புகளுக்கு மார்ச் 25-ம் தேதி முதல் அகில இந்தியஒதுக்கீடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 21, 2018

மருத்துவ பட்டமேற்படிப்புகளுக்கு மார்ச் 25-ம் தேதி முதல் அகில இந்தியஒதுக்கீடு

மருத்துவ பட்டமேற்படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு வரும் 25-ம் தேதி முதல் இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.
நாடுமுழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், மத்திய பல்கலைக்கழகங்களில் உள்ள எம்டி, எம்எஸ் பட்டமேற்படிப்பு மற்றும் பட்டய மேற்படிப்புக்கு (டிப்ளமோ) தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் (நீட்) தகுதி பெறுபவர்களைக் கொண்டு நிரப்பப்படுகிறது.

தேசிய தேர்வுகள் வாரியம் 2018-19-ம் கல்விஆண்டு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு கடந்த ஜனவரி 7-ம் தேதி நடத்தியது. தமிழகத்தில் சுமார் 20 ஆயிரம் பேர் உட்பட நாடுமுழுவதும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படித்த அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றும் 1 லட்சத்து 28 ஆயிரத்து 917 டாக்டர்கள் நீட் தேர்வை எழுதினர். இந்த நீட் தேர்வின் முடிவுகளும், தரவரிசைப் பட்டியலும் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளன.

இந்நிலையில் எம்டி, எம்எஸ், டிப்ளமோ மற்றும்எம்டிஎஸ் படிப்புகளுக்கு 50 சதவீத இடங்களுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு www.mcc.nic.in என்ற இணையதளத்தில் கடந்த17-ம் தேதி முதல் தகுதி பெற்றவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர். வரும் 24-ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். 25, 26-ம் தேதி முதல் கட்ட இடங்கள் ஒதுக்கீடும், 27-ம் தேதி அதன் முடிவுகளும் வெளியிடப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி