தென் தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை- வானிலை மையம் அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 14, 2018

தென் தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை- வானிலை மையம் அறிவிப்பு

இந்தியப் பெருங்கடலில் நிலவிவந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதால்,தென் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:இந்தியப் பெருங்கடலில் இலங்கை, குமரிக்கடல், மாலத்தீவுகளை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவிவந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது.

இது 13-ம் தேதி காலை 8.30 மணி அளவில் மாலத்தீவுகளுக்கு வடகிழக்கே 290 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளது. இது, மேலும் வடமேற்கு திசையில் லட்சத்தீவுகளை நோக்கி நகரும்.இதன் காரணமாக தென் தமிழகப் பகுதிகளான ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல், மதுரை, தேனி மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் இன்றும், நாளையும் மிதமான மழை பெய்யும். தென் தமிழகப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யும்.குமரிக் கடல், தெற்கு கேரளப் பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படும். இப்பகுதிகளில் மணிக்கு 45 முதல் 65 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். எனவே, மீனவர்கள் தென் தமிழக கடலோரப் பகுதி, குமரிக்கடல், மாலத்தீவு பகுதிகளுக்கு இன்றுசெல்ல வேண்டாம். குறைந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம் லட்சத்தீவை நோக்கி நகர்வதால் அப்பகுதிகளுக்கு இன்றும், நாளை யும் மீனவர்கள் செல்ல வேண்டாம்.

நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தில் 40 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. தொண்டியில் 20 மி.மீ., பாம்பன், கமுதி, மணிமுத்தாறு, சேரன்மகாதேவி, திருப்புவனம், மானாமதுரை, இளையான்குடி, அம்பாசமுத்திரம், ராமேசுவரம், கோவில்பட்டி, தூத்துக்குடி, சிவகாசியில் 10 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி