அரசு வேலையில் சேர 5 ஆண்டு ராணுவ பணி கட்டாயம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 16, 2018

அரசு வேலையில் சேர 5 ஆண்டு ராணுவ பணி கட்டாயம்

ராணுவத்தில் 5 ஆண்டுகள் கட்டாயமாக பணியாற்றியவர்களுக்கே மத்திய அரசு அல்லது மாநில அரசுகள் வேலை வழங்க வேண்டும் என பார்லி. நிலைக்குழு தனது பரிந்துரையில் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
முப்படை எனப்படும் ராணுவம், கப்பற்படை, விமானப்படையில் நாளுக்கு நாள் வீரர்கள், ஊழியர்கள் பற்றாகுறை நிலவி வருகிறது. இதனை சரிக்கட்ட பாதுகாப்புத்துறை தொடர்பான பார்லி. நிலைக்குழு மத்திய அரசுக்கு பரிந்துரை ஒன்றை அளித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.அதில் கூறப்பட்டுள்ளதாவது: , ''இந்திய ராணுவத்தில் 7,679 அதிகாரிகள் , 20,185 வீரர்கள் ,விமானப்படையில் 146 அதிகாரிகள், 15,357 வீரர்கள் , கடற்படையில் 1,434 அதிகாரிகள், 14,730 ஆயிரம் வீரர்கள் பற்றாக்குறை நிலவுகிறது.

இப்பற்றாக்குறையை சமாளிக்க இனிவரும் காலங்களில் அரசுவேலையில் சேர விரும்புவர்கள் அனைவரும் 5 ஆண்டுகள் ராணுவத்தில் கட்டாயம் சேவை செய்து இருக்க வேண்டும் என்று விதியை நடைமுறைப்படுத்த வேண்டும்'' அவ்வாறு 5 ஆண்டுகள் சேவை செய்து இருப்பவர்களுக்கு மட்டுமே அரசு பணியில்முன்னுரிமை வழங்க வேண்டும். இதனை மத்திய அரசின் பணியாளர் மற்றும் பயிற்சித்துறை கவனிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

14 comments:

  1. அருமையான திட்டம். நாட்டின் பாதுகாப்பிற்கு ஒவ்வொரு இளைஞனும் கட்டாயம் ஐந்து ஆண்டுகள் பணியாற்ற வேண்டும். அரசு வேலையில் சேர விருப்பம் உள்ளவர்களே ஐந்து ஆண்டுகள் பணியாற்ற வேண்டும் என்றால் அரசை வழிநடத்தும் அரசியல்வாதிகள் குறைந்தது பதினைந்து ஆண்டுகள் ராணுவத்தில் பணிசெய்ய வேண்டும். இந்த பதினைந்து ஆண்டுகளில் கட்டாயம் ஐந்து ஆண்டுகள் சியாச்சின் போன்ற பகுதிகளில் எல்லை பாதுகாப்பில் பணிசெய்யவேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. selvam sir correcta soneenga sir

      Delete
    2. Its my biggest doubt, do the politicians think and speak or just speak to get popularity? A leader should think well and give right solution to the people.

      Delete
  2. ஒவ்வொரு கல்லூரியிலும் எல்லை பாதுகாப்பு, கப்பல்படை, விமானப்படை மற்றும் மாநில காவல்துறை போன்றவற்றிற்கு தனியாக பாடதிட்டம் வகுத்து மூன்றாண்டு இளங்கலை இரண்டாண்டு முதுகலை பட்டப்படிப்பு தொடங்க வேண்டும். இதில் பட்டம் பெற்றால் மட்டுமே முப்படைகளில் வேலைவாய்ப்பு என்றால் இளைஞர்கள் கட்டாயம் நாட்டை பாதுகாக்க முன்வருவார்கள்.இப்படி பட்டம் பெற்றவர்களுக்கு படிக்கும் காலத்திலே பயிற்சி அளித்துவிட்டால் பணியில் சேர்ந்தபின் தனியாக பயிற்சி அளிக்க தேவை இருக்காது அதற்கான கால மற்றும் பண விரயங்களை தவிர்க்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. Adei avan avan nattula velai illama phd M.E padichavan kooda aaya velaikum sweeper velaikum apply pannitu irukan ithula military la patrakurainu soldringa...

      Delete
    2. Spot recruitment mattum pottu parunga 1 lacham peru vandhu apply pannuvan

      Delete
  3. Good. Athey pola MLA and MP ku vara degree mudichurukakum police compliant iruka kudathu . MP spoken irukanu law kondu vangaya.

    ReplyDelete
  4. அப்போ Mla, Mp எல்லாம் அகுறதுக்கு Degree. முடிக்கனும்னு சட்டம் கொண்டுவா,, ஏண்டா நீ கைநாட்டுபைய என்ன்ன ஆட்சி செய்யலாம், நாங்க Gvermnt வேலைக்கு வர்ரதுக்கு Army Service பண்ணணுமா,,! டேய் பரதேசி களா நாடு உங்களாலதாண்டா நாசமா போச்சு,, Military ல வேலை பார்க்கனுமா சந்தோஷம்தான்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி