குழந்தை தொழிலாளர் பள்ளிக்கு மூடுவிழா அபாயம்::9 மாத சம்பளம், வாடகை வழங்காத அவலம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 20, 2018

குழந்தை தொழிலாளர் பள்ளிக்கு மூடுவிழா அபாயம்::9 மாத சம்பளம், வாடகை வழங்காத அவலம்

குழந்தை தொழிலாளர் பள்ளிகளுக்கு வாடகையும்,ஆசிரியர்களுக்கு சம்பளமும் வழங்காததால் பள்ளிகள் மூடும் அபாயத்தில் உள்ளன.
கல்வியை தொடர முடியாமல் இடைநின்ற குழந்தைகளை கண்டறிந்து, அவர்கள் கல்வியை தொடர தேசிய குழந்தை தொழிலாளர் பள்ளிகள் செயல்படுகின்றன.

 மாவட்டத்தில் 19 பள்ளிகளில் 360க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயில்கின்றனர்.ஒவ்வொரு பள்ளியிலும் தொழில் கல்வி ஆசிரியர்கள், உதவியாளர்கள், கணக்காளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.இங்கு படிக்கும் மாணவர்களுக்கு 2016 முதல் சத்துணவு வழங்குவது நிறுத்தப்பட்டது. இதன் பின்னர் மாணவர் எண்ணிக்கை குறைந்து வருகிறது.இங்கு பணிபுரிந்து வரும் பணியாளர்களுக்கு9 மாதங்களாகசம்பளம் வழங்கப்படவில்லை. பள்ளிகள் செயல்படும் கட்டங்களுக்கு வாடகையும் வழங்க வில்லை.

குழந்தை திட்டதொழிலாளர்களுக்கு ஊக்கத் தொகையாக மாதம் ரூ.500 வீதம்வழங்கப்பட்டதை இரண்டு ஆண்டுகளாக வழங்கவில்லை.குழந்தை தொழிலாளர் நல பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட அரசு சலுகைகள் மற்றும் நிதி ஒதுக்கீடை வழங்காததால் இப்பள்ளிகள் மூடப்படும் அபாயத்தில் உள்ளன.

இதனால் குழந்தை தொழிலாளர்கள் மீண்டும் உருவாகும் நிலை ஏற்படும். இந்திய தொழிற்சங்க மைய தலைவர் முத்துராஜ், செயலாளர் கணேசன் ஆகியோர் ஆசிரியர், பணியாளர்களுடன் ஊழியர்கள் சம்பளம், பள்ளி வாடகை வழங்க கோரி கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி