இலங்கைக்கு ஒரு லட்சம் தமிழ் நூல்கள் வழங்கஇருப்பதாக, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.
கோவை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:ஓரிரு நாட்களில் மலேசிய தமிழாசிரியர்கள் தமிழகம் வர உள்ளனர். மலேசியா வாழ் தமிழர்கள் பயன்பெறும் வகையில் கலந்துரையாடல் நடைபெற உள்ளது.முதல்வரின் ஒப்புதலுடன், தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு ஒரு லட்சம் தமிழ் நூல்களை வழங்க உள்ளோம். இதற்காக, இலங்கை கல்வி அமைச்சர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகம் வந்து ஆலோசனை நடத்திச் சென்றார்.பெண்களுக்காக ஏராளமான திட்டங்களை வகுத்து, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா செயல்படுத்தினார்.
ஏழைப் பெண்களின் திருமணத்துக்கு தாலிக்கு 4 கிராம் தங்கம் என்பதை 8 கிராமாக உயர்த்தி, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தினார். மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், பெண்களுக்குப் பாதுகாப்பு வழங்குவதில் தமிழகம் முன்னோடியாகத் திகழ்கிறது. இதற்கு உதாரணமாக, சென்னை அண்ணா நகர், கோவை ஆர்.எஸ்.புரம் காவல் நிலையங்கள் சிறந்த காவல் நிலையங்களாக மத்திய அரசால் தேர்வு செய்யப்பட்டு, பாராட்டு பெற்றுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
கோவை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:ஓரிரு நாட்களில் மலேசிய தமிழாசிரியர்கள் தமிழகம் வர உள்ளனர். மலேசியா வாழ் தமிழர்கள் பயன்பெறும் வகையில் கலந்துரையாடல் நடைபெற உள்ளது.முதல்வரின் ஒப்புதலுடன், தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு ஒரு லட்சம் தமிழ் நூல்களை வழங்க உள்ளோம். இதற்காக, இலங்கை கல்வி அமைச்சர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகம் வந்து ஆலோசனை நடத்திச் சென்றார்.பெண்களுக்காக ஏராளமான திட்டங்களை வகுத்து, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா செயல்படுத்தினார்.
ஏழைப் பெண்களின் திருமணத்துக்கு தாலிக்கு 4 கிராம் தங்கம் என்பதை 8 கிராமாக உயர்த்தி, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தினார். மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், பெண்களுக்குப் பாதுகாப்பு வழங்குவதில் தமிழகம் முன்னோடியாகத் திகழ்கிறது. இதற்கு உதாரணமாக, சென்னை அண்ணா நகர், கோவை ஆர்.எஸ்.புரம் காவல் நிலையங்கள் சிறந்த காவல் நிலையங்களாக மத்திய அரசால் தேர்வு செய்யப்பட்டு, பாராட்டு பெற்றுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி