ஓய்வூதியர்கள் குறைகளை எழுதி அனுப்பலாம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 11, 2018

ஓய்வூதியர்கள் குறைகளை எழுதி அனுப்பலாம்

குறை தீர்க்கும் கூட்டத்திற்கு, ஓய்வூதியர்கள் தங்கள் குறைகளை எழுதி அனுப்பலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.சென்னை கலெக்டர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு:
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், கலெக்டர் தலைமையில், ஓய்வூதியர் குறை தீர்க்கும் கூட்டம், ஏப்., 10ல் நடக்கிறது.

இதில், சென்னையைச் சேர்ந்த, மாநில அரசு அலுவலகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்கள், ஓய்வூதியம் பெறுவதில் குறைகள் இருப்பின், எழுதி அனுப்பலாம்.மாவட்ட ஆட்சியர், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், 62, ராஜாஜி சாலை, சென்னை- - 1 என்ற முகவரிக்கு, 19ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி