ஜாக்டோ - ஜியோ இன்று பேரணி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 24, 2018

ஜாக்டோ - ஜியோ இன்று பேரணி

பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, ஜாக்டோ - ஜியோ அமைப்பினர், இன்று மாவட்ட தலைநகரங்களில் பேரணி நடத்து கின்றனர்.இது குறித்து, ஆசிரியர், அரசு ஊழியர் கூட்டமைப்பான, ஜாக்டோ - ஜியோ செய்தி தொடர்பாளர், தியாகராஜன் கூறியதாவது:
பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைப்படி, ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகளை போல், ஜன., 2016 முதல், ஊதிய உயர்வு திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.

தொகுப்பூதிய ஆசிரியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள் உள்ளிட்ட, அனைவரையும் பணி நிரந்தரம் செய்து, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, மாவட்ட தலைநகரங்களில், இன்று பேரணி நடத்தப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

2 comments:

  1. 2013 காரர்களுக்கு 50-50 தருவதாக அமைச்சர் உறுதி சொன்னாராமே. உண்மை?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி