புதிய ஓய்வூதியத் திட்டத்தில் தமிழக அரசு ஏமாற்றுகிறது - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 31, 2018

புதிய ஓய்வூதியத் திட்டத்தில் தமிழக அரசு ஏமாற்றுகிறது

''புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யாமல் தமிழக அரசு ஏமாற்றுகிறது,'' என, மதுரையில் ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் குற்றம் சாட்டினார்.அவர் கூறியதாவது:
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்வதாக மறைந்த முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் அறிவித்தார். அவரது வழியில் செயல்படுவதாக கூறும் தமிழக அரசு, அதை செயல்படுத்த மறுக்கிறது. உயர்நீதிமன்றத்தில் கடந்த நவ., 23 ல் தெரிவித்ததற்கு மாறாக புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்வது குறித்து அமைக்கப்பட்ட கமிட்டியை நீடித்து வருகிறது. 21 மாத நிலுவை தொகையை வழங்கவில்லை.

சம்பளக்குழு முரண்பாடுகளை களைய அரசு ஆர்வம் காட்டவில்லை. சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களுக்கு காலமுறை சம்பளம் வழங்கவில்லை. இக்கோரிக்கையை நிறைவேற்ற சென்னையில், மே 8 அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் முற்றுகை போராட்டம் நடத்துகின்றனர். சென்னையில் இன்று (மார்ச் 31) உயர்மட்ட குழு இதில் முடிவு செய்கிறது, என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி