மாணவர்கள் நீட் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் புதிய செயலி அறிமுகம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 20, 2018

மாணவர்கள் நீட் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் புதிய செயலி அறிமுகம்

சென்னையில் பத்திரிகையாளர் மன்றத்தில் நீட் தேர்வு செயலி தொடர்பான செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது பேசிய தன்னார்வ தொண்டு நிறுவன தலைவர் ராம் பிரகாஷ், நீட் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் காணொலி மூலம் பயிற்சி வழங்க செயலி அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தெரிவித்தார்.
கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது தமிழக அரசு நீட் தேர்விற்காக பயிற்சி மையங்களை நடத்தி வருகிறது. அதே போல சிறப்பு வகுப்புகளும் நடத்தப்பட்டு வருகின்றன. NGO-க்கள் சார்பாகவும் கிராமங்களில் நீட் தேர்வு பயிற்சி சிறப்பு வகுப்புகள் நடைபெறுகின்றன என்றார்.

மேலும் பேசிய அவர் ஆனாலும் இன்னும் பெரும்பாலான கிராமங்களில் அல்லது பெரும்பாலான ஊர்களில் தலைநகர் சென்னை, பெங்களூரு போன்ற பெரிய நகரங்களில் உள்ளது போல நீட் தேர்வுக்கு தயாராக கூடிய வசதிகள் இல்லை என்றார்.

பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களால் ஒரு விண்ணப்பம் ரூ.1400 கொடுத்து வாங்க இயலாது என்ற சூழல் நிலவுகிறது. இந்த நிலையில் எப்படி தங்கள் குழந்தைகளை ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்து சிறப்பு பயிற்சி வகுப்புகளுக்கு அனுப்ப முடியும் என்றார். இந்த விஷயத்தை போக்கும் வகையில் LETS ACT என்ற கான்செப்டில் புதிய செயலி அறிமுகப்படுத்தப்படும் என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி