12ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி நிறுத்தம்: ஊதியத்தை மாற்றி அமைக்க ஆசிரியர்கள் கோரிக்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 13, 2018

12ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி நிறுத்தம்: ஊதியத்தை மாற்றி அமைக்க ஆசிரியர்கள் கோரிக்கை

ஊதியத்தை மாற்றி அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் நிறைவேறும் வரை 12ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியை செய்ய போதுவதில்லை என தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஊதிய முரன்பாட்டை கரைய வேண்டும் என்பது தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்களின் கோரிக்கையாகும். இதனை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் 12ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் வருகிற செவ்வாய் கிழமை வரை இந்த போராட்டம் தொடரும் என்றும் கூறியுள்ளனர்.

ஊதிய பிரச்சனை காரணமாக ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். விடைத்தாள் திருத்தும் பணி நிறுத்தப்பட்டுள்ளதால் குறிப்பிட நேரத்தில் தேர்வு முடிவு வெளியிட சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி