பிளஸ் 2 விடைத்தாள் திருத்தம் இன்று துவக்கம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 11, 2018

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தம் இன்று துவக்கம்

பிளஸ் 2 பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி, இன்று துவங்குகிறது.பிளஸ் 2 பொதுத் தேர்வு, மார்ச், 1ல் துவங்கியது;ஏப்., 6ல் முடிந்தது. பிளஸ் 1 தேர்வு, மார்ச், 7ல் துவங்கி, வரும், 13ல் முடிகிறது. பத்தாம் வகுப்பு தேர்வுகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், விடைத்தாள்திருத்தும் பணி, இன்று துவங்க உள்ளது. மொத்தம், 8.66 லட்சம் மாணவர்களின் விடைத்தாள்கள் திருத்தப்பட உள்ளன. அனைத்து பாடங்களுக்கும் சேர்த்து, மொத்தம், 60லட்சம் விடைத்தாள்கள் திருத்தப்பட வேண்டும். இதற்கானபணிகளில், 2.50 லட்சம் ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர்.முதற்கட்டமாக, இன்று அனைத்துத் தேர்வு மையங்களிலும், தலைமை விடை திருத்துனர் மற்றும் தலைமை கண்காணிப்பாளர் ஆகியோர், விடை திருத்தும் பணியில் ஈடுபடுவர்.

நாளை முதல், மற்ற விடை திருத்துனர்கள், இப்பணியில் ஈடுபட உள்ளனர்.பிளஸ் 2 தேர்வு முடிவுகளை, மே, 16ல் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, மே முதல் வாரத்திற்குள், பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும்பணிகளை முடிக்க, அரசு தேர்வுத் துறை முடிவு செய்துள்ளது.

இதற்கிடையில், மே மாதம் வரை, பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியை நீட்டித்தால், அப்பணியைபுறக்கணிக்க போவதாக, ஆசிரியர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி