காரைக்குடி ராமனாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலை பள்ளியில் வகுப்பறை பற்றாக்குறை காரணமாக மாணவர்களை சேர்க்க இயலாத நிலையில் உள்ளதாக பள்ளி சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.
காரைக்குடி ராமனாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலை பள்ளியில் 950 மாணவர்கள் படிக்கின்றனர். பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறையிலும் சிறப்பு வகுப்பு, மாலை நேர கல்வி அளித்து மூன்று ஆண்டுகளாக 100 சதவீத தேர்ச்சி பெற்று வருகின்றனர். மாநில அரசின் துாய்மை பள்ளி விருது வழங்கப்பட்டது. மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கழிப்பறை, வகுப்பறைகள் இல்லை. தற்போது ஆறாம் வகுப்பில் சேர்வதற்காக 300-க்கும் மேற்பட்டோர் பள்ளியில் பதிவு செய்துள்ளனர். ஆனால், வகுப்பறை பற்றாக்குறை காரணமாக ஆறாம் வகுப்பு ஆங்கில வழி கல்வியில் 50 மாணவர்களும், தமிழ் வழி கல்வியில் 35 மாணவர்கள் மட்டுமே சேர்க்க இடவசதி உள்ளது. பிற வகுப்புகளுக்கு மாணவர்களை சேர்க்க இயலாத நிலையில் உள்ளோம்', என தலைமை ஆசிரியர், பெற்றோர் ஆசிரியர் கழகம், மேலாண்மை குழு, மேலாண்மை மற்றும் வளர்ச்சி குழு சார்பில் அறிவிப்பு பலகை வைத்துள்ளனர். வேகமாக வளர்ந்துவரும் பள்ளிக்கு இப்பிரச்னை பின்னடைவாக கருதப்படுகிறது.
ஒரு புறம் மாணவர்கள் பற்றாக்குறை, மறுபுறம் வரும் மாணவர்களை வரவேண்டாம் என கூறும் அரசுப்பள்ளி காலத்தின் கொடுமை…!!!!!!!
ReplyDelete