தொலைநிலைக் கல்வியிலிருந்து கல்லூரிக்கு மாறும் வசதி: இந்த ஆண்டு முதல் சென்னைப் பல்கலை. அறிமுகம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 20, 2018

தொலைநிலைக் கல்வியிலிருந்து கல்லூரிக்கு மாறும் வசதி: இந்த ஆண்டு முதல் சென்னைப் பல்கலை. அறிமுகம்

தொலைநிலைக் கல்வி முறையிலிருந்து கல்லூரிக்கும், கல்லூரி படிப்பிலிருந்து தொலைநிலைக் கல்வி முறைக்கும் மாணவர்கள் மாறிக் கொள்ளும் வகையில் புதியவசதியை வரும் கல்வியாண்டு முதல் (2018-19) சென்னைப்பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்த உள்ளது.
பத்தாம் வகுப்பு, பிளஸ்-2 முடித்து தொலைநிலைக் கல்வி அல்லது திறந்தநிலை பல்கலைக்கழகங்களில் பெறப்படும் பட்டங்கள், கல்லூரியில் சேர்ந்து பெறும் பட்டத்துக்கு இணையானது எனவும், அனைத்து வகை வேலைவாய்ப்புகளுக்கும் இந்தப் பட்டப் படிப்புகளையும் தகுதியானதாக கருத வேண்டும் எனவும் யுஜிசி தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. யுஜிசி-யின் இந்தக் கருத்தை மேலும் ஒருபடி உயர்த்தி, தொலைநிலைப் பட்டப் படிப்புகளை முழுமையாக, கல்லூரி பட்டப்படிப்புக்கு இணையானதாக மாற்றும் நடவடிக்கையை சென்னைப் பல்கலைக்கழகம் மேற்கொண்டு வருகிறது.இதுகுறித்து சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தர் துரைசாமி கூறியதாவது:சென்னைப் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி நிறுவனப் படிப்புகளின் தரத்தை மேம்படுத்தும் வகையில், இதன் பாடத் திட்டங்கள் அனைத்தும், நேரடி பட்டப் படிப்புக்கு இணையானதாக மாற்றப்பட்டுள்ளன. வருகிற கல்வியாண்டு முதல் இந்தப் புதிய பாடத் திட்டம் நடைமுறைக்கு வரவுள்ளது. மேலும் தேர்வு முறையும், பருவத் தேர்வு முறையாக மாற்றப்பட உள்ளது.

இதன் மூலம், தொலைநிலைக் கல்வி மாணவர் இரண்டாம் ஆண்டில் ஏதாவது ஒரு கல்லூரியில் சேர்ந்து படிக்க விரும்பினால், நேரடி இரண்டாம் ஆண்டு சேர்க்கை நடைமுறையின் அடிப்படையில் அவர் கல்லூரியில் சேர்ந்துகொள்ள முடியும்.அதுபோல, கல்லூரியில் படித்து வரும் மாணவர் அல்லது மாணவி தவிர்க்க முடியாத சூழலில் படிப்பைத் தொடர இயலாமல் போனால், அவர் தொலைநிலைக் கல்வி முறைக்கு மாறிக் கொள்ள முடியும். இந்த வசதி வரும் கல்வியாண்டு (2018-19) முதல் நடைமுறைக்குக் கொண்டுவரப்படும் என்றார் அவர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி