செல்ஃபிக்கு இனி தடை? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 4, 2018

செல்ஃபிக்கு இனி தடை?

செல்ஃபி எடுப்பது என்ற பெயரில் விபத்துகளில் மாட்டிஉயிருக்கே ஆபத்தாகமுடிவதைத் தொடர்ந்து, இனி ஆபத்தான இடங்களில் ‘நோ செல்ஃபி’ எச்சரிக்கை அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
சமீப காலமாக மிகவும் ஆபத்தான இடங்களில் செல்ஃபி எடுப்பது என்ற பெயரில் மொபைலை வைத்து தன்னைத்தானே படம் எடுத்துக்கொண்டு மாட்டிக்கொண்டு உயிரிழக்கும் அபாயம் அதிகரித்து வருகிறது.

ரயில் வருவதற்கு முன்பாக தண்டவாளத்தில் நின்றுகொண்டு செல்ஃபி எடுப்பது, மலை உச்சியில் நின்றுகொண்டு செல்ஃபி எடுப்பது, யானைகளையும் வன விலங்குகளையும் சீண்டிவிட்டு அதற்கு முன்பாக நின்றுகொண்டு செல்ஃபி எடுப்பது என எண்ணற்ற உயிருக்கே உலை வைக்கும் செல்ஃபி கலாசாரம் அதிகரித்துவருவது அனைவரும் அறிந்த செய்திகளாகும். இப்படி செல்ஃபி எடுப்பதால் பலரும் மரணமடைந்து வருகின்றனா்.இதை உணர்ந்த மத்திய அரசு ஆபத்தான இடங்களில் செல்ஃபி எடுப்பதைத் தடை செய்ய ஆலோசித்து வருகிறது.

இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் கேள்விக்கு ஒன்று பதிலளித்த மத்திய உள்துறையின் இணை அமைச்சா் கிரென் ரிஜிஜீ, “சுற்றுலா தளங்களிலும் அபாயகரமான இடங்களிலும் செல்ஃபி எடுப்பவர்களை ஒலி பெருக்கிகளின் மூலமாக எச்சரிப்பது, செல்ஃபி தடை செய்யப்படும் பகுதிகள் என்ற அறிவிப்பு பலகைகள் வைப்பது போன்ற நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. மகாராஷ்டிராவில் இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்று அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி