நாளை மறுநாள் 10ம் வகுப்பு, 'ரிசல்ட்' - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 21, 2018

நாளை மறுநாள் 10ம் வகுப்பு, 'ரிசல்ட்'

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள், நாளை மறுநாள் வெளியாகின்றன. முடிவுகள், மாணவர்கள் அளித்த, மொபைல் போன் எண்ணுக்கு, எஸ்.எம்.எஸ்., ஆக வரும்.
தமிழக பள்ளிக்கல்வித் துறையின், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு, மார்ச்சில் துவங்கி, ஏப்., 20 வரை நடந்தது. 10.20 லட்சம் மாணவ - மாணவியர் மற்றும் தனித்தேர்வர்கள் பங்கேற்றனர். விடைத்தாள் திருத்தம்,மே, 6ல் முடிந்தது. இதையடுத்து, மாவட்ட வாரியாக மதிப்பெண் பெற்று, இறுதி மதிப்பெண் பட்டியல் மற்றும் தேர்வு முடிவுகள் தயாரிக்கப்பட்டன. இந்தப் பணிகள், நேற்று நிறைவடைந்தன.தேர்வு முடிவுகள், திட்டமிட்டபடி, 23ம் தேதி வெளியிடப்பட உள்ளன. மாணவர்கள் வழங்கிய, மொபைல் போன் எண்ணுக்கு, தேர்வு முடிவுகள், எஸ்.எம்.எஸ்., ஆக, மதிப்பெண் விபரத்துடன் அனுப்பப்படும். மேலும், இணையதளத்திலும் தெரிந்து கொள்ளலாம்.

இந்த ஆண்டு, 10ம் வகுப்பு தேர்வில், தமிழ் முதல் தாள் உட்பட, அனைத்து பாடங்களுக்கான வினாத்தாள்கள் கடினமாகவே இருந்தன. இதனால், தேர்ச்சி சதவீதம், மதிப்பெண்கள் கடும் சரிவை சந்திக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.ஆனாலும், மாணவர்களின் எதிர்காலம் கருதி, அவர்களின் தேர்ச்சியில் பிரச்னை இருக்காது எனவும், மதிப்பெண்ணில் மட்டுமே மாற்றம் இருக்கும் எனவும், தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

10ம் வகுப்பு தேர்வு முடிவுகளுக்கும், 'ரேங்கிங்' முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளில், மாநில,மாவட்ட வாரியாக, முதல் மூன்று இடங்களை பெற்றவர்கள் விபரங்கள் இடம் பெறாது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி